FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, August 13, 2023

245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை


கோவை, ஆக.13: கோவை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்தியது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

அதன்பின் அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும், வேலை வாய்ப்பு முகாமுடன் இணைந்து சுயதொழில் புரிபவர்களுக்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்க தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment