FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, August 13, 2023

245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை


கோவை, ஆக.13: கோவை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்தியது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

அதன்பின் அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும், வேலை வாய்ப்பு முகாமுடன் இணைந்து சுயதொழில் புரிபவர்களுக்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்க தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment