FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, May 6, 2024

கணவனுடன் தகராறு; காது கேளாத வாய் பேசாத மகனை கால்வாயில் வீசிய தாய் - முதலையால் உயிரிழந்த சோகம்!



06.05.2024 கர்நாடகா மாநிலம், உத்தரகன்னடா மாவட்டம், ஹலமாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு வினோத் (6) என்ற மகன் இருந்தார். வினோத், பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், ரவிக்குமாருக்கு தனது மகனை பிடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரவிக்குமார் தனது மனைவி சாவித்திரியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், சாவித்திரி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-05-24) வழக்கம்போல் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகன் வினோத்தை வெளியே அழைத்து சென்று அங்குள்ள கால்வாயில் தூக்கி வீசி உள்ளார்.

இதனையடுத்து, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசிய பிறகு வருந்திய சாவித்திரி, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வினோத்தை போலீசார் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தேடி வந்தனர். நீண்டு நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று (05-05-24) காலை சிறுவன் வினோத் பிணமாக மீட்கப்பட்டார்.

இதில், மீட்கப்பட்ட சிறுவனின் வலது கை துண்டாகி இருந்ததுடன் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வாய் பேச முடியாத மகன் சாக வேண்டும் என்று ரவிக்குமார் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சிறுவனை, சிறிது நேரத்திலேயே கால்வாயில் இருந்த முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாவித்திரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலைகள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment