FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, May 6, 2024

கணவனுடன் தகராறு; காது கேளாத வாய் பேசாத மகனை கால்வாயில் வீசிய தாய் - முதலையால் உயிரிழந்த சோகம்!



06.05.2024 கர்நாடகா மாநிலம், உத்தரகன்னடா மாவட்டம், ஹலமாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு வினோத் (6) என்ற மகன் இருந்தார். வினோத், பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், ரவிக்குமாருக்கு தனது மகனை பிடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரவிக்குமார் தனது மனைவி சாவித்திரியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், சாவித்திரி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-05-24) வழக்கம்போல் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகன் வினோத்தை வெளியே அழைத்து சென்று அங்குள்ள கால்வாயில் தூக்கி வீசி உள்ளார்.

இதனையடுத்து, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசிய பிறகு வருந்திய சாவித்திரி, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வினோத்தை போலீசார் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தேடி வந்தனர். நீண்டு நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று (05-05-24) காலை சிறுவன் வினோத் பிணமாக மீட்கப்பட்டார்.

இதில், மீட்கப்பட்ட சிறுவனின் வலது கை துண்டாகி இருந்ததுடன் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வாய் பேச முடியாத மகன் சாக வேண்டும் என்று ரவிக்குமார் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சிறுவனை, சிறிது நேரத்திலேயே கால்வாயில் இருந்த முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாவித்திரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலைகள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment