FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, May 26, 2024

காது கேளாத வாய் பேச முடியாத பழங்குடியின சிறுமி தீவைத்துக் கொலை.. நடவடிக்கை எடுக்காத காவல்துறை




23.05.2024, ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.

வெளியே ஓடிவந்து பார்த்த போது . வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம் சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஒடிவிட்டதாக கூறினாள்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.

முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.




No comments:

Post a Comment