FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, May 11, 2024

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன்



10.05.2024 கேம்பிரிட்ஜ்: செவித்திறன் இல்லாமல் பிறந்த 18 மாத சிறுமி ஒருவருக்கு நவீன மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் செவித்திறன் பெற்றுள்ளார்.

இந்த சிகிச்சையின் மூலம் இயல்பானவர்கள் பெற்றுள்ள செவித்திறன் அளவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு அந்த சிறுமியின் செவித்திறன் செயல்பாடு அமைந்துள்ளதாக காது அறுவை சிகிச்சை நிபுணர் மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஒபல் சான்டி. பிறந்து 18 மாதமான அவருக்கு ஆடிட்டரி நியூரோபதி என்ற பாதிப்பின் காரணமாக காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு இருந்துள்ளது. இந்த பாதிப்பு காரணமாக செவித்திறன் இல்லாமல் அவர் பிறந்தார்.

இந்த சூழலில் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அடன்புரூக்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்குதான் அவருக்கு இந்த மரபணு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனோகர் பான்ஸ் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சிகிச்சையின் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறந்த முடிவுகளை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வகை மரபணு சிகிச்சையின் மூலம் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரீஜெனெரானால் இந்த மரபணு சிகிச்சை முறையை வடிவமைத்ததாக மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார். இதே முறையின் கீழ் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த சிகிச்சையின் கீழ் செவித்திறன் பெற்ற உலகின் முதல் நபராக ஒபல் இருப்பதாக மனோகர் பான்ஸ் சொல்கிறார். மேலும், இந்த சிகிச்சையை பெற்ற உலகின் இளம் வயது நபரும் ஒபல் தான் என அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment