FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, May 11, 2024

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்.. சைகையில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!



26.04.2024, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம். சைகை மொழியில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும், உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் வேளையில் இறங்கி இருந்தனர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயம்வரம் நிகழ்ச்சி மூலம், மகாலட்சுமியின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சுயம்வரம் நிகழ்ச்சியில் நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமண பந்தம் உறுதி செய்யப்பட்டு, பின்னர் நிச்சயதார்த்தமும் நடந்தது இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூரில் உள்ள குலதெய்வமான பச்சையம்மன் கோயிலில், இருவீட்டார் முன்னிலையில் இன்று நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து, திருமணம் முடிந்து மணமக்கள் கோயிலை சுற்றி வலம் வந்தபோது, வாய்பேச் 'முடியாத நாராயணனும், மகாலட்சுமியும் சைகை மொழியில் அன்பாக பேசிக்கொண்டது, இரு வீட்டாரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மேலும், அங்கிருந்த மக்களும் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.



No comments:

Post a Comment