FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, June 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை


15.06.2024
உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் பிரிவு 32 (1) இன்படி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்லூரி சேர்க்கை பெறுவதில், பின்தள்ளப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இவற்றைக் களைந்து கல்வி பயிலுவதில் கல்வி உரிமைகளை 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க பெறச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில் விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையலாம். மேலும், இது குறித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 044-27662985, கைப்பேசி எண்: 9499933496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.




No comments:

Post a Comment