FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, June 16, 2024

வேலூரில் வீடு.. 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் .. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு



15.06.2024 
மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களின் உடலில் உள்ள குறைகளின் அளவைப் பொறுத்து மத்திய மற்றும் தமிழக அரசின் உதவிகளை பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நலவாரியமும் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன்வசதி, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி, மாதம் மாதம் உதவி தொகை, சக்கர நாற்காலி, இலவச பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதுதவிர வீடு வாங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடும் கட்டித்தருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையில் ரூ.1.5 லட்சம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளவிமேட்டில் 12 வீடுகளும், டோபிகானாவில் 3 வீடுகளும், பத்தலப்பள்ளியில் 290 வீடுகளும், கரிகரியில் 230 வீடுகளும் என மொத்தம் 535 வீடுகள் வழங்க தயாராக உள்ளது. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment