FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, June 16, 2024

வேலூரில் வீடு.. 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் .. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு



15.06.2024 
மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களின் உடலில் உள்ள குறைகளின் அளவைப் பொறுத்து மத்திய மற்றும் தமிழக அரசின் உதவிகளை பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நலவாரியமும் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன்வசதி, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி, மாதம் மாதம் உதவி தொகை, சக்கர நாற்காலி, இலவச பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதுதவிர வீடு வாங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடும் கட்டித்தருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையில் ரூ.1.5 லட்சம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளவிமேட்டில் 12 வீடுகளும், டோபிகானாவில் 3 வீடுகளும், பத்தலப்பள்ளியில் 290 வீடுகளும், கரிகரியில் 230 வீடுகளும் என மொத்தம் 535 வீடுகள் வழங்க தயாராக உள்ளது. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment