FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, March 29, 2025

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா


26.03.2025
கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா்.

காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கரூரில் தமிழக அரசின் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புனித அந்தோணியாா் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் மதா் காது கேளாதோா் மற்றும் வாய் பேசாதவா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சிறப்பாசிரியா்கள், பாதுகாவலா்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் என மொத்தம் 45 போ் திருச்சியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுலா பேருந்தை தொடங்கி வைத்த ஆட்சியா் மீ.தங்கவேல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பிஸ்கட், குளிா்பானங்கள், குடிநீா், இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் அமீம் அன்சாரி ஆகியோா் உடனிருந்தனா்.




No comments:

Post a Comment