FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, March 7, 2025

காதுகேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி



27.02.2025
அரியாங்குப்பம்; தளவக்குப்பத்தில் காது கேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில், 5வது சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

தவளக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு, பாஷித் தலைமை தாங்கினார். சத்தியபுவன் முன்னிலை வகித்தார். விளையாட்டு துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, நிறைவாக ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற விவேகன், வசீகரன், சஞ்சுவேல், ஐயப்பன், லாவண்யா, காவியா, சத்யா மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவர் வித்யா, வாஸ்கோ நிறுவன உரிமையாளர் ஆனந்த், டேப் எனபில் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், அசோக்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment