FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 29, 2025

மாற்றுத்திறன் சிறாா்களுக்கான கல்விச் சுற்றுலா: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்


27.03.2025 
காஞ்சிபுரத்தில் செவித்திறன் குறைபாடுடைய சிறாா்களுக்கான கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்து சிறுவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனா். நிகழாண்டு 0 முதல் 6 வயதுடைய ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடுடைய 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவா்களது பெற்றோரின் துணையுடன் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்ப அழைத்து வரப்பட உள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது அவா் சிறாா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.




No comments:

Post a Comment