FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, March 29, 2025

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?

 


Claim: காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

Fact: இத்தகவல் தவறானது என்று ரோட்டரி சங்கத் தரப்பு தெளிவு செய்துள்ளது.


“பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்று உங்களுக்குத் தெரிந்தால், இப்போது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்த முடியும்.
அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது Rotary club of Bombay Worli, Dist 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பை SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. தயவுசெய்து மற்ற குழுக்களில் பதிவிடவும், இதனால் செய்தி தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும்”


என்று குறிப்பிட்டு வாட்ஸ்ஆப் தகவல் ஒன்று பரவி வருகின்றது. இத்தகவலை வாசகர் ஒருவர் இத்தகவலை நியூஸ்செக்கர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு (9999499044) அனுப்பி இதுக்குறித்த உண்மையை கேட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பாம்பே வொர்லி ரோட்டரி சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடுகையில் இதுபோன்ற எந்த ஒரு சேவையும் தருவதாக அதில் குறிப்பிட்டிருக்கவில்லை.


இதனையடுத்து வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பெருந்துறை சதாசிவம் என்பரை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் கடந்த இரண்டு வருடங்களாகவே பரவி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தார்.

Conclusion
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment