FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, July 6, 2025

மாற்றுத்திறனாளி அலுவலர் 'டிரான்ஸ்பர்'



05.07.2025 திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், தகுதியான பயனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டருக்கான, ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை மற்றொரு நபருக்கு வழங்கி முறைகேடு நடந்தது.

புகார் அதிகரித்ததால், சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து, ஆய்வு நடத்தி சென்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் குறித்து முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளும், இயல்பான மனிதர்களை போல் இயங்க வேண்டும்; தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி செய்கின்றன.

தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, தடையின்றி உதவி கிடைப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாறாக, சிபாரிசு என்ற பெயரில், பயனாளிகள் பட்டியலில் இல்லாத நபருக்கு உதவி வழங்க கூடாது; பதிவு மூப்பு அடிப்படையில், நல உதவிகள் வழங்குவதை புதிய கலெக்டர் உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.


No comments:

Post a Comment