FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, July 6, 2025

மாற்றுத்திறனாளி அலுவலர் 'டிரான்ஸ்பர்'



05.07.2025 திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், தகுதியான பயனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டருக்கான, ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை மற்றொரு நபருக்கு வழங்கி முறைகேடு நடந்தது.

புகார் அதிகரித்ததால், சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து, ஆய்வு நடத்தி சென்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் குறித்து முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளும், இயல்பான மனிதர்களை போல் இயங்க வேண்டும்; தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி செய்கின்றன.

தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, தடையின்றி உதவி கிடைப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாறாக, சிபாரிசு என்ற பெயரில், பயனாளிகள் பட்டியலில் இல்லாத நபருக்கு உதவி வழங்க கூடாது; பதிவு மூப்பு அடிப்படையில், நல உதவிகள் வழங்குவதை புதிய கலெக்டர் உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.


No comments:

Post a Comment