FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, July 6, 2025

மாற்றுத்திறனாளி அலுவலர் 'டிரான்ஸ்பர்'



05.07.2025 திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், தகுதியான பயனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டருக்கான, ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை மற்றொரு நபருக்கு வழங்கி முறைகேடு நடந்தது.

புகார் அதிகரித்ததால், சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து, ஆய்வு நடத்தி சென்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் குறித்து முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளும், இயல்பான மனிதர்களை போல் இயங்க வேண்டும்; தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி செய்கின்றன.

தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, தடையின்றி உதவி கிடைப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாறாக, சிபாரிசு என்ற பெயரில், பயனாளிகள் பட்டியலில் இல்லாத நபருக்கு உதவி வழங்க கூடாது; பதிவு மூப்பு அடிப்படையில், நல உதவிகள் வழங்குவதை புதிய கலெக்டர் உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.


No comments:

Post a Comment