FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 6, 2025

மாற்றுத்திறனாளி அலுவலர் 'டிரான்ஸ்பர்'



05.07.2025 திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், தகுதியான பயனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டருக்கான, ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை மற்றொரு நபருக்கு வழங்கி முறைகேடு நடந்தது.

புகார் அதிகரித்ததால், சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து, ஆய்வு நடத்தி சென்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் குறித்து முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளும், இயல்பான மனிதர்களை போல் இயங்க வேண்டும்; தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி செய்கின்றன.

தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, தடையின்றி உதவி கிடைப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாறாக, சிபாரிசு என்ற பெயரில், பயனாளிகள் பட்டியலில் இல்லாத நபருக்கு உதவி வழங்க கூடாது; பதிவு மூப்பு அடிப்படையில், நல உதவிகள் வழங்குவதை புதிய கலெக்டர் உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.


No comments:

Post a Comment