FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, February 14, 2026

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம். மறியலில் ஈடுபட முயன்ற 450 பேர் கைது



12.02.2026
சென்னை: ​மா​தாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஆந்​தி​ரா​வில் வழங்​கு​வதை போல, தமிழகத்​தி​லும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மாதாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக்​கோரி, தமிழக அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கம் சார்​பில், சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பாக நேற்​று​முன்​தினம் போராட்டம் நடை​பெற்​றது.

இதைத் தொடர்ந்​து, மறியலில் ஈடுபட முயன்ற மாற்​றுத் திற​னாளி​களை போலீ​ஸார் கைது செய்​தனர். உதவித் தொகையை உயர்த்தி தரக்​கோரி மூன்​றரை ஆண்​டு​களாக போராடி வரு​கிறோம். இது​வரை எங்​கள் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்​ற​வில்​லை. எங்​களின் ஒற்றை கோரிக்​கையை நிறைவேற்​றும் வரை போராட்டம் தொடரும் என்று மாற்​றுத் திற​னாளி​கள் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், இக்​கோரிக்​கையை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பு, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இப்​போ​ராட்​டத்​தில் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச் செய​லா​ளர் பா.ஜான்சி ராணி, பொருளாளர் சக்​ர​வர்த்​தி, ஊனமுற்​றோர் உரிமை​களுக்​கான தேசிய மேடை செயல் தலை​வர் எஸ்​.நம்​பு​ராஜன் உள்பட 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இது​போல, தமிழகத்​தில் 35 மாவட்​டங்​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 6,500-க்​கும் மேற்​பட்ட மாற்​றுத் திற​னாளி​கள் கைது செய்யப்பட்டனர்​.


No comments:

Post a Comment