FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, March 27, 2014

கால் விரல்களால் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்

27.03.2014,
குமாரபாளையத்தில் கால் விரலுக்கிடையே பேனாவைப் பிடித்து 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மகேஷ் (15).

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மகேஷ் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தனது பாட்டி பார்வதியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் மகேஷ், ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.

தமிழகமெங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்ற போது, இவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதினார். இடது கால் பெருவிரலுக்கிடையே பேனாவைப் பிடித்து லாவகமாக எழுதத் தொடங்கினார்.

மேலும், வெள்ளைத்தாளை எடுக்கவும், பேனா மூடியைத் திறக்கவும் வளர்ச்சி குறைந்த தனது கையைப் பயன்படுத்திக் கொண்டார். விடைத்தாளைப் புரட்டவும், வினாத்தாளைப் புரட்டவும் கால்களையே உபயோகப்படுத்தினார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை கூடுதலாக ஒரு மணி நேரம் விடையளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேபோல, இந்தப் பள்ளியைச் சேர்ந்த இருவர் எழுதுவோர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment