FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, March 27, 2014

கால் விரல்களால் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்

27.03.2014,
குமாரபாளையத்தில் கால் விரலுக்கிடையே பேனாவைப் பிடித்து 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மகேஷ் (15).

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மகேஷ் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தனது பாட்டி பார்வதியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் மகேஷ், ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.

தமிழகமெங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்ற போது, இவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதினார். இடது கால் பெருவிரலுக்கிடையே பேனாவைப் பிடித்து லாவகமாக எழுதத் தொடங்கினார்.

மேலும், வெள்ளைத்தாளை எடுக்கவும், பேனா மூடியைத் திறக்கவும் வளர்ச்சி குறைந்த தனது கையைப் பயன்படுத்திக் கொண்டார். விடைத்தாளைப் புரட்டவும், வினாத்தாளைப் புரட்டவும் கால்களையே உபயோகப்படுத்தினார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை கூடுதலாக ஒரு மணி நேரம் விடையளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேபோல, இந்தப் பள்ளியைச் சேர்ந்த இருவர் எழுதுவோர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment