FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 27, 2014

கால் விரல்களால் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்

27.03.2014,
குமாரபாளையத்தில் கால் விரலுக்கிடையே பேனாவைப் பிடித்து 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மகேஷ் (15).

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மகேஷ் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தனது பாட்டி பார்வதியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் மகேஷ், ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.

தமிழகமெங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்ற போது, இவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதினார். இடது கால் பெருவிரலுக்கிடையே பேனாவைப் பிடித்து லாவகமாக எழுதத் தொடங்கினார்.

மேலும், வெள்ளைத்தாளை எடுக்கவும், பேனா மூடியைத் திறக்கவும் வளர்ச்சி குறைந்த தனது கையைப் பயன்படுத்திக் கொண்டார். விடைத்தாளைப் புரட்டவும், வினாத்தாளைப் புரட்டவும் கால்களையே உபயோகப்படுத்தினார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை கூடுதலாக ஒரு மணி நேரம் விடையளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேபோல, இந்தப் பள்ளியைச் சேர்ந்த இருவர் எழுதுவோர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment