FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 27, 2014

கால் விரல்களால் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்

27.03.2014,
குமாரபாளையத்தில் கால் விரலுக்கிடையே பேனாவைப் பிடித்து 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மகேஷ் (15).

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மகேஷ் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தனது பாட்டி பார்வதியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் மகேஷ், ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.

தமிழகமெங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்ற போது, இவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதினார். இடது கால் பெருவிரலுக்கிடையே பேனாவைப் பிடித்து லாவகமாக எழுதத் தொடங்கினார்.

மேலும், வெள்ளைத்தாளை எடுக்கவும், பேனா மூடியைத் திறக்கவும் வளர்ச்சி குறைந்த தனது கையைப் பயன்படுத்திக் கொண்டார். விடைத்தாளைப் புரட்டவும், வினாத்தாளைப் புரட்டவும் கால்களையே உபயோகப்படுத்தினார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை கூடுதலாக ஒரு மணி நேரம் விடையளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேபோல, இந்தப் பள்ளியைச் சேர்ந்த இருவர் எழுதுவோர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment