FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, March 25, 2014

ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி..

23 March 2014
ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி...- குமரன் கே.; பக்.132; ரூ. 250; கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை-83; )044-2489 5734.

23 வயதே நிறைவடைந்த, மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்ய விரும்புவதையும் சுயசரிதை நூலாக
வெளிக்கொணர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு- உடல் ரீதியாக தான் அனுபவித்து வரும் வலிகளை புறந்தள்ளிவிட்டு- தனது ஆசைகளையும், விருப்பங்களையும் எளிய தமிழில் பதிவு செய்திருக்கிறார்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நூலாசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையான பள்ளிக்குச் சென்று படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியையும், பட்டப்படிப்பையும் தொலைநிலைக் கல்வி மூலம் படித்து, தற்போது உளவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அதோடு, தானே ஒரு மருத்துவமனையைத் தொடங்கி, உளவியலாளராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் மனதில் ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் இதன்மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளும் ஏனைய சராசரி மனிதர்களைப் போல காதலித்து திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ உரிமையுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்தியாவில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

"உலகிலுள்ள எல்லாரையும் போல்தான் நாங்களும், எங்களை நோக்கி பரிதாபப் பார்வை வீசுவதைவிட, தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதே சிறந்தது. அன்பு கலந்த பார்வையும் சிறு புன்னகையும் போதும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைச் செழுமைப்படுத்த. இவை நிகழும்போது இந்த உலகம் மேன்மை பெறும்' என்று இந்த நூலின் முடிவுரையில் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்றால் அது மிகையில்லை.

No comments:

Post a Comment