FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, March 12, 2014

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல

கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி
அறிவியல் முடித்து விட்டு ஆட்டோ கன்சல்டன்ட் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மூலம் திருநெல்வேலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்த முனியாண்டி மகள் கனியம்மாள் (22) என்பவரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் இனம்புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவி கனியம்மாள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈரோடு வந்து ஆனந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்தனர்.

ஊனமுற்ற வாலிபரை திருமணம் செய்தால் உன்வாழ்க்கை வீணாகிவிடும் என அச்சம் தெரிவித்தனர். மேலும் மகளுக்கு பல்வேறு தடைகள் போட்டனர்.

இதனால் மனம் விரும்பியவரை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ என வேதனையடைந்த கனியம்மாள் கடந்த மாதம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரது தந்தை மகளின் விருப்பத்திற்கே வாழ்க்கை அமையட்டும் என விட்டுவிட்டார். ஆனால் தாயார் மகளின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் கனியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு வந்தார். பின்னர் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆனந்தகுமாரின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க வினாயகர்கோவிலில் தாலிகட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளி வாலிபரை கரம்பிடித்தது தொடர்பாக கனியம்மாள் கூறுகையில், ஊனம் ஒரு தடையல்ல. அவர் ரெம்ப நல்லவர். ஒழுக்கமானவர், என்னை காலம் முழுவதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனந்தகுமார் கூறுகையில், மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நானே வேலை செய்து காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment