FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, March 12, 2014

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல

கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி
அறிவியல் முடித்து விட்டு ஆட்டோ கன்சல்டன்ட் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மூலம் திருநெல்வேலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்த முனியாண்டி மகள் கனியம்மாள் (22) என்பவரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் இனம்புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவி கனியம்மாள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈரோடு வந்து ஆனந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்தனர்.

ஊனமுற்ற வாலிபரை திருமணம் செய்தால் உன்வாழ்க்கை வீணாகிவிடும் என அச்சம் தெரிவித்தனர். மேலும் மகளுக்கு பல்வேறு தடைகள் போட்டனர்.

இதனால் மனம் விரும்பியவரை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ என வேதனையடைந்த கனியம்மாள் கடந்த மாதம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரது தந்தை மகளின் விருப்பத்திற்கே வாழ்க்கை அமையட்டும் என விட்டுவிட்டார். ஆனால் தாயார் மகளின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் கனியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு வந்தார். பின்னர் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆனந்தகுமாரின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க வினாயகர்கோவிலில் தாலிகட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளி வாலிபரை கரம்பிடித்தது தொடர்பாக கனியம்மாள் கூறுகையில், ஊனம் ஒரு தடையல்ல. அவர் ரெம்ப நல்லவர். ஒழுக்கமானவர், என்னை காலம் முழுவதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனந்தகுமார் கூறுகையில், மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நானே வேலை செய்து காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment