FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, March 12, 2014

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல

கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி
அறிவியல் முடித்து விட்டு ஆட்டோ கன்சல்டன்ட் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மூலம் திருநெல்வேலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்த முனியாண்டி மகள் கனியம்மாள் (22) என்பவரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் இனம்புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவி கனியம்மாள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈரோடு வந்து ஆனந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்தனர்.

ஊனமுற்ற வாலிபரை திருமணம் செய்தால் உன்வாழ்க்கை வீணாகிவிடும் என அச்சம் தெரிவித்தனர். மேலும் மகளுக்கு பல்வேறு தடைகள் போட்டனர்.

இதனால் மனம் விரும்பியவரை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ என வேதனையடைந்த கனியம்மாள் கடந்த மாதம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரது தந்தை மகளின் விருப்பத்திற்கே வாழ்க்கை அமையட்டும் என விட்டுவிட்டார். ஆனால் தாயார் மகளின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் கனியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு வந்தார். பின்னர் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆனந்தகுமாரின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க வினாயகர்கோவிலில் தாலிகட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளி வாலிபரை கரம்பிடித்தது தொடர்பாக கனியம்மாள் கூறுகையில், ஊனம் ஒரு தடையல்ல. அவர் ரெம்ப நல்லவர். ஒழுக்கமானவர், என்னை காலம் முழுவதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனந்தகுமார் கூறுகையில், மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நானே வேலை செய்து காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment