FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, May 14, 2019

`14 பேரும் அந்த இடத்துக்குப் போயிட்டு வந்தோம்!'- செய்திவாசிப்பாளர் விஜயா பாஸ்கரன் கண்ணீர்!

12.05.2019
நடிகை ஜோதிகாவுக்கு 'மொழி' படத்தில் சைன் லாங்குவேஜ் (காதுகேளா, வாய் பேச இயலாதவர்களுக்கான மொழி) சொல்லிக் கொடுத்தவர் விஜயா பாஸ்கரன். பல தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல படங்களுக்கு இது போல சைன் லாங்குவேஜ் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும், நீதிமன்றங்களில் ஆஜராகும் காதுகேளா, வாய் பேச இயலாதவர்களின் மொழிகளுக்கு விளக்கம் கொடுப்பவர். இப்படிக் கடந்த பல வருடங்களாக இந்தப் பணிகளில் இருப்பவர், தொடர்ந்து புதிய தலைமுறை செய்தி வாசிப்பிலும் இருந்து வருகிறார் விஜயா பாஸ்கரன்.

கடந்த ஒரு வாரகாலமாக அவரை புதிய தலைமுறையில் பார்க்க முடியவில்லை. என்ன ஆச்சு என்று விசாரித்தேன்.

``தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பாகும் செய்தியில் காது கேளாத வாய்பேசாதவர்களுக்காகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன். நம்மைப் போன்ற மனிதர்கள்தான் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களும், நம்மைப் போன்றே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நாட்டு, நடப்புகளைத் தெரிந்துகொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்டது சைன் லாங்குவேஜ் நியூஸ் ரீடிங். என் சகோதரி சந்திராவால்தான் எனக்கு இந்த மொழி கைவசம் வந்தது. அவருக்கு இப்போது எழுபது வயதுக்கும் மேல் ஆகிறது. வீட்டில் அவருடன் பேசிப் பேசி எனக்கு இந்த மொழி அத்துப்படியாகிடுச்சு'' என்றவர், 

'என் சகோதரி, என் பேத்தி என குடும்பத்தாரோடு கடந்த பத்து நாள்களாக சுற்றுப்பயணத்தில் இருந்தேன். எல்லோரா, அஜந்தா என பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தேன். ஒவ்வொரு வருடமும் இரண்டு முறையாவது இப்படி சுற்றுலா செல்வது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் விடுமுறையில் இருக்கிறேன். நாளை முதல் என் பணியை தொடர்வேன்'' என்பவர்,

''முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்புதான் அங்கே சென்று வந்தோம். குண்டு வெடிப்பு நடைபெற்ற தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். இநக்ச் செய்தியை டி.வியில் பார்த்தபோது என் சகோதரி கண்கலங்கி அழுததை என்னால் மறக்கவே முடியாது. நம்மைப் போன்று சாதாரணமானவர்களைவிட இரண்டு மடங்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என் சகோதரியைப் போன்றுள்ள மாற்றுத் திறனாளிகள். செய்தியைப் பார்த்ததும், என் சகோதரி சந்திரா, ``என்னைப் போன்ற பதினான்கு பேரும் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தோம். இன்னும் சில நாள்கள் தள்ளிச் சென்றிருந்தால் நாம் உயிருடன் இருந்திருக்க முடியாது'' என அழுதார்.

மேலும் கூறுகையில், ``அவருடன் 14 மாற்றுத் திறனாளிகள் அந்த சுற்றுலாப் பயணத்தில் இருந்தனர். இலங்கையில் அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர். இலங்கையில் இறங்கியதும், என்னுடன் வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிவசப்பட்டு, `மண்ணைத் தொட்டு கண்ணில் வச்சுக்கிட்டாங்க. முருகர் கோயில் உள்ளிட்டப் பல கோயில்களுக்குப் போயிருந்தோம். இலங்கையில் ராமர் வாழ்ந்தது நிஜமா என்பதை அறிந்துகொள்வதுதான் இந்த வருட இலங்கைப் பயணத்துக்கான ஏற்பாடு. ஏற்கெனவே தமிழர்கள் பலரைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் உறவினர்கள் நொந்து போயிருக்காங்க. எங்களுக்கு அவர்களைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. `அந்தக் கோயில், சர்ச் எப்படி ஆகிடுச்சுப் பாத்தியா'னு என் சகோதரி சந்திரா அழுதபோது தேற்றக்கூடிய வார்த்தை என்னிடம் இல்லை'' என்றார் விஜயா பாஸ்கரன்.

No comments:

Post a Comment