FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, May 21, 2019

'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம்

20.05.2019
கோவை : 'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நம் நாட்டில் பிறக்கும், 1,000 குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில், இந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது, சாப்பிடும் மருந்துகள், கதிர் வீச்சு, கிருமித்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவி உள்வாங்கும் திறனை இழக்கின்றன.

செவித்திறன் குறைபாடு இருப்பதால், குழந்தைகள் பேசுவதில் பிரச்னை ஏற்படுகிறது.இத்தகைய குழந்தைகளது காதின் உட்புறம் காதொலி கருவி பொருத்தினால், கேட்கும் திறன் கிடைக்கும். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்டேஷன்' எனப்பெயர். செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குபின், பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர்.

காதின் உட்புறம் பொருத்தப்படும் இக்கருவியை வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment