FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, May 21, 2019

'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம்

20.05.2019
கோவை : 'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நம் நாட்டில் பிறக்கும், 1,000 குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில், இந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது, சாப்பிடும் மருந்துகள், கதிர் வீச்சு, கிருமித்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவி உள்வாங்கும் திறனை இழக்கின்றன.

செவித்திறன் குறைபாடு இருப்பதால், குழந்தைகள் பேசுவதில் பிரச்னை ஏற்படுகிறது.இத்தகைய குழந்தைகளது காதின் உட்புறம் காதொலி கருவி பொருத்தினால், கேட்கும் திறன் கிடைக்கும். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்டேஷன்' எனப்பெயர். செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குபின், பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர்.

காதின் உட்புறம் பொருத்தப்படும் இக்கருவியை வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment