FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, May 21, 2019

'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம்

20.05.2019
கோவை : 'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நம் நாட்டில் பிறக்கும், 1,000 குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில், இந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது, சாப்பிடும் மருந்துகள், கதிர் வீச்சு, கிருமித்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவி உள்வாங்கும் திறனை இழக்கின்றன.

செவித்திறன் குறைபாடு இருப்பதால், குழந்தைகள் பேசுவதில் பிரச்னை ஏற்படுகிறது.இத்தகைய குழந்தைகளது காதின் உட்புறம் காதொலி கருவி பொருத்தினால், கேட்கும் திறன் கிடைக்கும். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்டேஷன்' எனப்பெயர். செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குபின், பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர்.

காதின் உட்புறம் பொருத்தப்படும் இக்கருவியை வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment