FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, May 14, 2019

17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியபக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

10.05.2019, மும்பை, 

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாற்றுத்திறனாளி சிறுமி

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த 17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென வாந்தி எடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சிறுமியை அவளது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்தார். அங்கு அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் சைகை மூலம் அவளிடம் கேட்ட போது, அவளை பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர் கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதுபற்றி சிறுமியின் தாய் கோவண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளியான சிறுமியின் பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment