FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, May 14, 2019

17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியபக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

10.05.2019, மும்பை, 

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாற்றுத்திறனாளி சிறுமி

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த 17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென வாந்தி எடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சிறுமியை அவளது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்தார். அங்கு அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் சைகை மூலம் அவளிடம் கேட்ட போது, அவளை பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர் கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதுபற்றி சிறுமியின் தாய் கோவண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளியான சிறுமியின் பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment