FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, May 14, 2019

செவித்திறன் குன்றிய மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் மலையேறி சாதனை..!

செவித்திறன் குறைந்த இரண்டு மாணவர்கள், ஸ்கேட்டிங்
மூலம் 52 கிலோ மீற்றர் தூரம் கொடைக்கானல்
மலையேறி சாதனை படைத்துள்ளனர்
11.05.2019
தமிழகத்தின் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செவித் திறன் பாதித்த மாணவர்கள் ராகுல்கண்ணன் (15) மற்றும் கமலேஷ் (10). இவர்களில், ராகுல்கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மதுரையில் உள்ள 'யூத் ஸ்கேட்டிங் அகாடமி'யில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்கண்ணன், ஒரு நிமிடத்தில் 3 அடி தடை தாண்டும் போட்டி, 54 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டது, 40 நிமிட ஓட்டப் போட்டியை 20 நிமிடங்களில் நிறைவு செய்தது என, ஸ்கேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ராகுல்கண்ணன், கமலேஷ் ஆகியோர் நேற்று (8ம் தேதி) காலை, காட்ரோட்டில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு, ஸ்கேட்டிங் மூலம் 6 மணி நேரத்தில் மலையேறி வந்தனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரத்தினகுமார் கூறியதாவது; “மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்கேட்டிங் மூலம் மலையேற்ற பயிற்சியளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உத்வேகம் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. இவர்களது ஸ்கேட்டிங் திறன் எதிர்காலத்தில் சாதனைகள் பல புரியும் வகையில் உள்ளது” என்றார்.

No comments:

Post a Comment