FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, May 14, 2019

செவித்திறன் குன்றிய மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் மலையேறி சாதனை..!

செவித்திறன் குறைந்த இரண்டு மாணவர்கள், ஸ்கேட்டிங்
மூலம் 52 கிலோ மீற்றர் தூரம் கொடைக்கானல்
மலையேறி சாதனை படைத்துள்ளனர்
11.05.2019
தமிழகத்தின் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செவித் திறன் பாதித்த மாணவர்கள் ராகுல்கண்ணன் (15) மற்றும் கமலேஷ் (10). இவர்களில், ராகுல்கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மதுரையில் உள்ள 'யூத் ஸ்கேட்டிங் அகாடமி'யில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்கண்ணன், ஒரு நிமிடத்தில் 3 அடி தடை தாண்டும் போட்டி, 54 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டது, 40 நிமிட ஓட்டப் போட்டியை 20 நிமிடங்களில் நிறைவு செய்தது என, ஸ்கேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ராகுல்கண்ணன், கமலேஷ் ஆகியோர் நேற்று (8ம் தேதி) காலை, காட்ரோட்டில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு, ஸ்கேட்டிங் மூலம் 6 மணி நேரத்தில் மலையேறி வந்தனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரத்தினகுமார் கூறியதாவது; “மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்கேட்டிங் மூலம் மலையேற்ற பயிற்சியளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உத்வேகம் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. இவர்களது ஸ்கேட்டிங் திறன் எதிர்காலத்தில் சாதனைகள் பல புரியும் வகையில் உள்ளது” என்றார்.

No comments:

Post a Comment