FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, May 14, 2019

செவித்திறன் குன்றிய மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் மலையேறி சாதனை..!

செவித்திறன் குறைந்த இரண்டு மாணவர்கள், ஸ்கேட்டிங்
மூலம் 52 கிலோ மீற்றர் தூரம் கொடைக்கானல்
மலையேறி சாதனை படைத்துள்ளனர்
11.05.2019
தமிழகத்தின் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செவித் திறன் பாதித்த மாணவர்கள் ராகுல்கண்ணன் (15) மற்றும் கமலேஷ் (10). இவர்களில், ராகுல்கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மதுரையில் உள்ள 'யூத் ஸ்கேட்டிங் அகாடமி'யில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்கண்ணன், ஒரு நிமிடத்தில் 3 அடி தடை தாண்டும் போட்டி, 54 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டது, 40 நிமிட ஓட்டப் போட்டியை 20 நிமிடங்களில் நிறைவு செய்தது என, ஸ்கேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ராகுல்கண்ணன், கமலேஷ் ஆகியோர் நேற்று (8ம் தேதி) காலை, காட்ரோட்டில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு, ஸ்கேட்டிங் மூலம் 6 மணி நேரத்தில் மலையேறி வந்தனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரத்தினகுமார் கூறியதாவது; “மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்கேட்டிங் மூலம் மலையேற்ற பயிற்சியளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உத்வேகம் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. இவர்களது ஸ்கேட்டிங் திறன் எதிர்காலத்தில் சாதனைகள் பல புரியும் வகையில் உள்ளது” என்றார்.

No comments:

Post a Comment