FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, May 14, 2019

செவித்திறன் குன்றிய மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் மலையேறி சாதனை..!

செவித்திறன் குறைந்த இரண்டு மாணவர்கள், ஸ்கேட்டிங்
மூலம் 52 கிலோ மீற்றர் தூரம் கொடைக்கானல்
மலையேறி சாதனை படைத்துள்ளனர்
11.05.2019
தமிழகத்தின் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செவித் திறன் பாதித்த மாணவர்கள் ராகுல்கண்ணன் (15) மற்றும் கமலேஷ் (10). இவர்களில், ராகுல்கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மதுரையில் உள்ள 'யூத் ஸ்கேட்டிங் அகாடமி'யில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்கண்ணன், ஒரு நிமிடத்தில் 3 அடி தடை தாண்டும் போட்டி, 54 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டது, 40 நிமிட ஓட்டப் போட்டியை 20 நிமிடங்களில் நிறைவு செய்தது என, ஸ்கேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ராகுல்கண்ணன், கமலேஷ் ஆகியோர் நேற்று (8ம் தேதி) காலை, காட்ரோட்டில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு, ஸ்கேட்டிங் மூலம் 6 மணி நேரத்தில் மலையேறி வந்தனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரத்தினகுமார் கூறியதாவது; “மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்கேட்டிங் மூலம் மலையேற்ற பயிற்சியளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உத்வேகம் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. இவர்களது ஸ்கேட்டிங் திறன் எதிர்காலத்தில் சாதனைகள் பல புரியும் வகையில் உள்ளது” என்றார்.

No comments:

Post a Comment