FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, May 21, 2019

காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது?

20.05.2019
ஒருவேளை காது கேட்காமல் போனால், காக்லியர் இம்பிளான்ட்(Cochlear implant) சிகிச்சை ஒரு தீர்வாக இருக்கலாம் என்கிறார் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர். டாக்டர். ஜே.எம்.ஹான்ஸ்.

சாதாரணமாகவே நம் காதுகள் ஒரு ஆற்றல் மாற்றி போல் செயல்படும். அவை என்ன செய்யும் என்றால், ஒலி அலைகளை உள்வாங்கி, அதை ஆற்றல் அலைகளாக மாற்றி, அதை உங்கள் மூளைக்கு செலுத்தும். அவ்வாறு செலுத்தப்படும் அலைகளை உள்வாங்கும் மூளை, அதில் உள்ள தகவல்களை புரிந்துகொண்டு, அதன்பின், அதற்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்ற தகவலினை வாய்க்கு அனுப்பும். இவற்றில் ஏதாவது ஒரு செயல் தடைபட்டாலும், பின் உள்ள மொத்த செயல்பாடுகளும் பாதிப்படையும், மேலும் இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், பேச முடியாத நிலைக்குக்கூட ஆளாகலாம்.

எப்போதாவது, ட்ராமா, வைரல் தாக்குதல் அல்லது வேறு ஏதாவது காரணங்களால், இந்த செல்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டாலோ அல்லது செயல்பாடு நின்றுவிட்டாலோ, ஒலி அலைகளை உள்வாங்கி அதை ஆற்றல் அலைகளாக மாற்றும் செயல்பாடு நின்றுவிடும். அதனால், நமக்கு காது கேட்காமல் போய்விடும். இதற்கு என்ன தீர்வு என்று ஆராய்த்ததில் காக்லியர் இம்பிளான்ட்(Cochlear implant) சிகிச்சை ஒரு தீர்வாக இருக்கலாம் என்கிறார் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர். டாக்டர். ஜே.எம்.ஹான்ஸ். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ள இவர் செவிமடலியல் துறையில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ளார். இந்த காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சையில் சிறந்து விளங்கும் இவர், பல அரசு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த சிகிச்சை பற்றி அவர் கூறும் தகவல்கள் இதோ!


கேள்வி: காக்லியர் இம்பிளான்ட் என்றால் என்ன?

டாக்டர். ஹான்ஸ் :
நமது காதுகளினுள் இருக்கும் செல்கள் ஒலி அலைகளை உள்வாங்கி, அதை ஆற்றல் அலைகளாக மாற்றி, அதை உங்கள் மூளைக்கு அனுப்பும். இந்த செல்களின் செயல் தடைபட்டால், செவித்திறன் குறையும். அப்போது, இந்த காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை உங்களுக்கு உதவும். இந்த சிகிச்சையில், உங்களின் காதுகளில் ஒரு கருவி பொருத்தப்பட்டும். இரு பாகங்களை கொண்டுள்ள அந்த கருவியின் வெளிப்பாகத்தில் ஒரு மைக் மற்றும் அந்த கருவியை செயல்படுத்த உதவும் பட்டன் பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள மைக் ஒலிகளை உள்வாங்கி, ரேடியோ சிக்னலாக மாற்றி, செவியின் உள்ளே உள்ள கருவியின் பகுதிக்கு அனுப்பும். அந்த கருவி, இந்த அலைகளை பெற்று அதை ஆற்றல் அலைகளாக மாற்றி நேரடியாக உங்கள் செவி நரம்புகளுக்கு அளிக்கும். பின் அவை மூளைக்கு செல்லும். இதனால், உங்கள் செவியின் செயல்பாடு பாதிக்கப்படாது.

மேலும் இந்த கருவியின் வெளியில், அது செயல்படுவதற்காக ஒரு பேட்டரி இருக்கும். அதுமட்டுமின்றி, ஒலி உள்ளீட்டு அளவினை கட்டுப்படுத்த ஒரு பட்டனும் இருக்கும்.

கேள்வி: இதை யாருக்கெல்லாம் பயன்படுத்தலாம்?

டாக்டர். ஹான்ஸ் :

பிறப்பின்போதே செவித்திறன் குறைபாடுள்ளவர்கள், மற்றும் இடையிலே ஏதாவது காரணங்களால் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டவர்கள் என அனைவருக்கும் இந்த சிகிச்சையின் மூலம் பலன் பெறலாம். உங்கள் செவிகள் செய்யும் வேலையை செவிகளில் இருந்து இந்த கருவி செய்யும்.

கேள்வி: எத்தனை வயதில் உள்ளவர்களுக்கு இந்த கருவி பொருத்தலாம்?

டாக்டர். ஹான்ஸ் :

இந்த கருவியை 8 மாத குழந்தைகளிலிருந்து அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். குழந்தைகள் ஒருவேளை பிறக்கும்போதே, செவித்திறன் குறைபாடுடன் பிறந்தால், அந்த குழந்தை 8 மாதங்களாக இருக்கும்பொழுதே இந்த கருவியை பொருத்துவது நல்லது. இந்த கருவியை எந்த வயதில் வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால், குழந்தைகளின் வளர்ச்சி என்பது செவியில் இருந்துதான் துவங்குகிறது. குழந்தைகள், முதலில் நாம் பேசுவதை கேட்டு கேட்டு தான் பேச துவங்கும். அம்மாதிரியான நிலைமையில், குழந்தைகளுக்கு இந்த குறைபாடு இருந்தால் அவர்களுக்கு, முன்னதாகவே இந்த கருவிகளை பொருத்துவது நல்லது.

கேள்வி: இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

டாக்டர். ஹான்ஸ் :

இந்த சிகிச்சையின் செலவு என்பதே சற்றே அதிகம்தான். நான் ஒரு நூறு பேருக்கு இந்த சிகிச்சையை பரிந்துரைக்கிறேன் என்றால், அதில் ஒரு பத்து பேர் பட்டுமே பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 பேர், இந்த சிகிச்சையின் செலவு காரணமாக இதை தவிர்க்கிறார்கள். இந்த சிகிச்சை செய்ய குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், அதிகபட்சமாக 16 லட்சங்கள் வரை செலவிட நேரிடும். இதனை ஒருமுறை மேற்கொண்டால், வாழ்நாள் வரை இதன் பலன் நீடித்திருக்கும்.

No comments:

Post a Comment