FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, November 13, 2019

இனி காதுகேளாதோரும் தேர்தலில் போட்டியிடலாம்: அரசாணை வெளியீடு

13.11.2019
இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாதவராகவோ, வாய் பேச முடியாதவராகவோ இருந்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சட்டவிதி இருந்தது.

அதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்பவர் தொழுநோயாளியாக இருக்கும் பட்சத்திலும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்றும் சட்ட விதி இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விதியானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டத்திருத்தம் நடைபெற்றது.

அதாவது, இந்த விதிகளை வரையறுக்கும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment