FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, November 13, 2019

இனி காதுகேளாதோரும் தேர்தலில் போட்டியிடலாம்: அரசாணை வெளியீடு

13.11.2019
இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாதவராகவோ, வாய் பேச முடியாதவராகவோ இருந்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சட்டவிதி இருந்தது.

அதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்பவர் தொழுநோயாளியாக இருக்கும் பட்சத்திலும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்றும் சட்ட விதி இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விதியானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டத்திருத்தம் நடைபெற்றது.

அதாவது, இந்த விதிகளை வரையறுக்கும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment