FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, November 13, 2019

இனி காதுகேளாதோரும் தேர்தலில் போட்டியிடலாம்: அரசாணை வெளியீடு

13.11.2019
இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாதவராகவோ, வாய் பேச முடியாதவராகவோ இருந்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சட்டவிதி இருந்தது.

அதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்பவர் தொழுநோயாளியாக இருக்கும் பட்சத்திலும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்றும் சட்ட விதி இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விதியானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டத்திருத்தம் நடைபெற்றது.

அதாவது, இந்த விதிகளை வரையறுக்கும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment