FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, November 13, 2019

இனி காதுகேளாதோரும் தேர்தலில் போட்டியிடலாம்: அரசாணை வெளியீடு

13.11.2019
இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் தொழுநோயாளிகளும் உள்ளாட்சொ தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுவரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாதவராகவோ, வாய் பேச முடியாதவராகவோ இருந்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சட்டவிதி இருந்தது.

அதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்பவர் தொழுநோயாளியாக இருக்கும் பட்சத்திலும் அவரது மனுவை நிராகரிக்கலாம் என்றும் சட்ட விதி இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விதியானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டத்திருத்தம் நடைபெற்றது.

அதாவது, இந்த விதிகளை வரையறுக்கும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அந்த சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றியும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment