FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, November 14, 2019

ஓசூரில் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டி


10.11.2019 ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய, காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 13 மாவட்டத்தில் இருந்து, 300 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நேற்று துவங்கியது. சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, அரியலூர், சேலம், திருப்பூர், வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உட்பட மொத்தம், 13 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தனர். வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவியர் பிரிக்கப்பட்டு, ரங்கோலி, கோலம், ஓவியம், நடனம், பேஷன் ?ஷா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றுடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பு தலைவர் பலராமன், செயலாளர் ஜெய்சங்கர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment