FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 14, 2019

ஓசூரில் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டி


10.11.2019 ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய, காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 13 மாவட்டத்தில் இருந்து, 300 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நேற்று துவங்கியது. சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, அரியலூர், சேலம், திருப்பூர், வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உட்பட மொத்தம், 13 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தனர். வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவியர் பிரிக்கப்பட்டு, ரங்கோலி, கோலம், ஓவியம், நடனம், பேஷன் ?ஷா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றுடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பு தலைவர் பலராமன், செயலாளர் ஜெய்சங்கர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment