FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, November 14, 2019

ஓசூரில் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டி


10.11.2019 ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய, காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 13 மாவட்டத்தில் இருந்து, 300 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நேற்று துவங்கியது. சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, அரியலூர், சேலம், திருப்பூர், வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உட்பட மொத்தம், 13 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தனர். வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவியர் பிரிக்கப்பட்டு, ரங்கோலி, கோலம், ஓவியம், நடனம், பேஷன் ?ஷா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றுடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பு தலைவர் பலராமன், செயலாளர் ஜெய்சங்கர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment