FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 14, 2019

காலியாக இருக்குது துப்புரவாளர் பணி: அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு

13.11.2019
கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு, அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், ஐந்து லட்சம் கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூன்று பேர் நியமிக்க வேண்டும்.இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.அதனால், காலியாக உள்ள, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 'கமிஷனர், கோயம்புத்துார் மாநகராட்சி, பிரதான அலுவலகம், பெரிய கடை வீதி, கோயம்புத்துார்-641001' என்ற முகவரிக்கு, வரும், 15ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர்) மற்றும் பொதுப்போட்டி ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணம் இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும், என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment