FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, November 14, 2019

காலியாக இருக்குது துப்புரவாளர் பணி: அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு

13.11.2019
கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு, அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், ஐந்து லட்சம் கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூன்று பேர் நியமிக்க வேண்டும்.இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.அதனால், காலியாக உள்ள, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 'கமிஷனர், கோயம்புத்துார் மாநகராட்சி, பிரதான அலுவலகம், பெரிய கடை வீதி, கோயம்புத்துார்-641001' என்ற முகவரிக்கு, வரும், 15ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர்) மற்றும் பொதுப்போட்டி ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணம் இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும், என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment