FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, November 14, 2019

காலியாக இருக்குது துப்புரவாளர் பணி: அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு

13.11.2019
கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு, அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், ஐந்து லட்சம் கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூன்று பேர் நியமிக்க வேண்டும்.இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.அதனால், காலியாக உள்ள, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 'கமிஷனர், கோயம்புத்துார் மாநகராட்சி, பிரதான அலுவலகம், பெரிய கடை வீதி, கோயம்புத்துார்-641001' என்ற முகவரிக்கு, வரும், 15ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர்) மற்றும் பொதுப்போட்டி ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணம் இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும், என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment