FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2021

பார்வையற்ற, காது கேளாத 7,813 பேருக்கு 'ஸ்மார்ட் போன்'

06.01.2021
திருப்பூர்:தமிழகத்தில் பார்வையற்ற, காது கேளாத, 7,813 மாற்று திறனாளிகளுக்கு, இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், நவீன, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.'பிரெய்லி' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட, 12 ஆயிரத்து 799 ரூபாய் மதிப்புள்ள, இந்த போன், இலவசமாக வழங்கப்படுகிறது. பார்வையற்ற 3,907 பேர் மற்றும் காது கேளாத 3,906 பேருக்கு, இது வழங்கப்படும்; பயனாளிகள் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கூறுகையில், 'சென்னைக்கு, 222; தேனி, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு தலா 220; மற்ற மாவட்டங்களுக்கு, தலா 210 பயனாளிகள் வீதம், 'ஸ்மார்ட்' போன்' ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற, காது கேளாத மாணவ, மாணவியர், சுயதொழில் மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்' என்றனர்.


No comments:

Post a Comment