FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 7, 2021

பார்வையற்ற, காது கேளாத 7,813 பேருக்கு 'ஸ்மார்ட் போன்'

06.01.2021
திருப்பூர்:தமிழகத்தில் பார்வையற்ற, காது கேளாத, 7,813 மாற்று திறனாளிகளுக்கு, இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், நவீன, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.'பிரெய்லி' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட, 12 ஆயிரத்து 799 ரூபாய் மதிப்புள்ள, இந்த போன், இலவசமாக வழங்கப்படுகிறது. பார்வையற்ற 3,907 பேர் மற்றும் காது கேளாத 3,906 பேருக்கு, இது வழங்கப்படும்; பயனாளிகள் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கூறுகையில், 'சென்னைக்கு, 222; தேனி, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு தலா 220; மற்ற மாவட்டங்களுக்கு, தலா 210 பயனாளிகள் வீதம், 'ஸ்மார்ட்' போன்' ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற, காது கேளாத மாணவ, மாணவியர், சுயதொழில் மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்' என்றனர்.


No comments:

Post a Comment