FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 7, 2021

1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி - கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்த நாகராஜ்.

தேனி:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் தனது கையில் 7 பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தார். இதுகுறித்து பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "எனது கணவருக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனக்கு வந்த உதவித்தொகை பணத்தை எனக்கே தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதோடு அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவருக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் இந்த பணத்தை காண்பித்தார். அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது இந்த பணத்தை எப்படி மாற்றுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால், கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளிக்க வந்துள்ளோம். இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால் எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்" என்றார். பின்னர், அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.


No comments:

Post a Comment