FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 7, 2021

1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி - கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்த நாகராஜ்.

தேனி:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் தனது கையில் 7 பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தார். இதுகுறித்து பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "எனது கணவருக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனக்கு வந்த உதவித்தொகை பணத்தை எனக்கே தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதோடு அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவருக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் இந்த பணத்தை காண்பித்தார். அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது இந்த பணத்தை எப்படி மாற்றுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால், கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளிக்க வந்துள்ளோம். இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால் எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்" என்றார். பின்னர், அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.


No comments:

Post a Comment