FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, January 7, 2021

காதுகேளாத வாய்பேச முடியாத மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், உடைந்த கால்களோடு வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை

01.01.2021
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 3வயதில் லோகேஷ் என்ற மகனும், 2 வயதில் சாதனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் கடந்த 2015ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நிகழ்த்த விபத்தில் அவரது கால் எலும்புகள் 3 துண்டுகளாக உடைந்து பாதிக்கப்பட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர், சித்தேரி கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கால் உடைந்திருப்பதால் பிற கடினமான வேலைக்குச் செல்ல அவரால் முடியவில்லை. இந்த நிலையில் கிராம பகுதியில் இவர் நடத்திவரும் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.


எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு தனக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை கிடைத்தால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வாய்பேச முடியாத, காது கேளாத தனது மனைவியை கவனித்து கொள்ளவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments:

Post a Comment