FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 7, 2021

காதுகேளாத வாய்பேச முடியாத மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், உடைந்த கால்களோடு வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை

01.01.2021
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 3வயதில் லோகேஷ் என்ற மகனும், 2 வயதில் சாதனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் கடந்த 2015ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நிகழ்த்த விபத்தில் அவரது கால் எலும்புகள் 3 துண்டுகளாக உடைந்து பாதிக்கப்பட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர், சித்தேரி கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கால் உடைந்திருப்பதால் பிற கடினமான வேலைக்குச் செல்ல அவரால் முடியவில்லை. இந்த நிலையில் கிராம பகுதியில் இவர் நடத்திவரும் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.


எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு தனக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை கிடைத்தால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வாய்பேச முடியாத, காது கேளாத தனது மனைவியை கவனித்து கொள்ளவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments:

Post a Comment