FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, January 7, 2021

வாய் பேச இயலாத 4 வயது சிறுமியை பாலியல் சித்திரவதை செய்த 51 வயது காமுகனுக்குச் சாகும் வரை சிறை!

01.01.2021
கோவையில் 4 வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 51வயது நபருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

3 மாதங்களாகக் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையம் குறிப்பிட்ட வழக்கைப் பதிவு செய்திருந்தது.

வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த பாலன்(51) என்பவருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இதுபோக, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு போக்சோ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



No comments:

Post a Comment