FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2021

வாய் பேச இயலாத 4 வயது சிறுமியை பாலியல் சித்திரவதை செய்த 51 வயது காமுகனுக்குச் சாகும் வரை சிறை!

01.01.2021
கோவையில் 4 வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 51வயது நபருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

3 மாதங்களாகக் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையம் குறிப்பிட்ட வழக்கைப் பதிவு செய்திருந்தது.

வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த பாலன்(51) என்பவருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இதுபோக, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு போக்சோ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



No comments:

Post a Comment