FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 7, 2021

தனது உருவத்தை ஓவியமாக தீட்டிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

07.01.2021
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் வந்தனா (வயது 23). இவர் பிறப்பிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பெண் ஆவார். ஒரு பயிற்சி நிலையத்தில் ஓவியம் கற்று வருகிறார். தீபாவளியையொட்டி, அவர் பிரதமர் மோடியின் உருவத்தை ‘ரங்கோலி’ வகை ஓவியமாக தீட்டி, அதை பிரதமருக்கு அனுப்பி வைத்தார். இந்த ஓவியம், பலரது பாராட்டுகளை பெற்றது. இந்தநிலையில், வந்தனாவை பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வாழ்க்கையில் முட்டுக்கட்டைகளும், சவால்களும் வரலாம். ஆனால், எதிர்மறையான சூழ்நிலையில் கூட மனம் தளராமல், உறுதியுடன் போராடினால், அதுதான் உண்மையான வெற்றி ஆகும். தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்.


No comments:

Post a Comment