FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, February 16, 2025

பிளக்ஸ் பேனரில் ஐஸ்வர்யா ராய்! வாய் பேச முடியாத அபிநயா நடிக்க வந்தது எப்படி? கிரேட் ஃபாதர்!




சென்னை: நாடோடிகள் எனும் படத்தில் நடித்த அபிநயா, காது கேட்காத வாய் பேச முடியாதவராக இருந்த போதிலும் அவர் எப்படி நடிப்பதற்கு வந்தார் என்பது தெரிந்து முடியும். இதன் மூலம் உடலில் எந்த பிரச்சினை இருந்தாலும் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்கலாம். 

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு அப்பாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு பேசவோ, கேட்கவோ முடியாது என்று பின்னாளில் தெரிகிறது. அப்போது முதல் அந்த அப்பாவுக்கு அந்த குழந்தை தான் உலகம் என்றாகி விடுகிறது. மற்ற குழந்தைகளைப்போல் தன் குழந்தையும் வளர்ந்து ஆசைப்பட்டது போல் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதே தன் கடமை என நினைக்கிறார் அந்த தந்தை. அப்படியே அப்பெண்ணும் வளர்கிறாள். ஒரு நாள் ஸ்கூட்டரில் அந்த தந்தை தன் மகளை சாலையில் கொண்டு செல்லும் போது ஒரு ஃப்ளெக்ஸ் போர்டை சுட்டிக் காட்டுகிறாள். 

அதில் ஐஸ்வர்யா ராய் இருக்க அதைப் பார்த்துக் கொண்டே விடுகிறார். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் அந்த குழந்தை தந்தையை அழைத்து அதே ஃப்ளெக்ஸை காண்பிக்கும் தந்தைக்கு புரிந்து போகிறது. அது போல் ஃப்ளெக்ஸ்களில் வரவேண்டுமென தன் மகள் நினைக்கிறாள் என புரிந்து கொண்ட அவர், அதற்கான காரியத்தில் இறங்கினார். மக்களை வைத்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி விளம்பர ஏஜன்சிகள் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குகிறார். ஆனால் வாய் பேச முடியாத பெண் என வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக ஒரு ஏஜன்ஸியிடம் போட்டோ இருக்கிறது. அதைப் பார்க்க கேரளாவிலிருந்து ஒரு விளம்பரப்பட இயக்குனர் ஹைதராபாத் வருகிறார்.

அவரிடம் விளம்பர ஏஜன்ஸி பல பெண்களின் போட்டோக்களை. தன் மகளின் ஆல்பத்தை ஒதுக்கி வைத்தார்கள் என அப்போது அங்கே இருந்த அப்பாவுக்கு தெரிந்து விடுகிறது. அவர் உடைந்து போகிறார். அந்த கேரள இயக்குனர் கார் ஏறப்போகும் பார்க்கிங்குக்கு ஓடிச் சென்று நாதழுதழுக்க தன் மகளின் போட்டோக்களை ஏஜன்ஸி காட்டவில்லையென்றும், தயவு செய்து பார்க்க வேண்டும் என்றும், தன் மகளால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும் சொல்லும் போதே அவரின் கலக்கத்தை பார்க்கிறார் அந்த இயக்குனர். 

தந்தையின் எமோஷனலுக்காக போட்டோக்களை பெற்றுக்கொண்டு வந்து விடுகிறார். இது நடந்து பல மாதங்கள் கழித்து இயக்குனர் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் புதுமுகங்களை தேடி எர்ணாகுளம் வந்து அவரிடம் போட்டோக்களையும், விபரங்களையும், தந்தையின் எமோஷனலையும் சொல்ல போன் கால் ஹைதராபாத்துக்கு போகிறது. 

அப்போது வந்து இறங்கிய பெண் தான் நடிகை அபிநயா. போட்டோடில் டெஸ்ட் பாஸாகி அபிநயாவை நடிக்க வைத்து பார்த்த சமுத்திரக்கனியும், சசிகுமாரும் ஷாக்காகிறார்கள். பெயருக்கேற்றார் போல் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் அபிநயா. அவர் குறைபாடுகள் எதுவுமே தெரியாமல் அசத்துகிறார்.

நாடோடிகள்' படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது. தெலுங்கு, கன்னட ரீமேக்குகளிம் அபிநயாவையே நடிக்க வைக்கிறார்கள். தெலுங்குப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் சசி 'ஈசன்' பட வாய்ப்பை தருகிறார். 

சமீபத்தில் 'பணி' பார்த்த போது உண்மையில் அசத்தி இருந்தார் அபிநயா. ஒரு காதல் மனைவியாக அவர் எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் கொள்ளை அழகு. பணி பட பிரமோஷனில் அபிநயாவை மேடையில் உட்கார வைத்து மேடையில் யார் பேசினாலும் எதிரே அவருக்கு புரியும் விதமாக டிரான்ஸ்லேட்டரை வைத்து சைகை பாஷையில் புரிய வைக்க இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் செய்த காரியங்களெல்லாம் அவரின் மேல் நன்மதிப்பைக் கூட்டுகிறது. 

ஒருவர் இந்த சமுதாயத்தில் எப்படி குறைகளோடு பிறந்தாளென்ன..யார் தூற்றினாலும், தாழ்த்தினாலும் அவர்களை கவனிக்க வெண் சிறகு தேவதைகள் இருக்கத்தான் செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்கின்றன. அபிநயாவின் அப்பா, சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோஜு என பல வகை.... வாழ்க்கை எல்லோரும் வாழ்வதற்கே.... இவ்வாறு அவர் தனது போஸ்டில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment