FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 5, 2020

WHO’s Covid course in ISL to help the hearing-impaired

30.06.2020
KOCHI: The Covid-19 pandemic has ushered in the new normal of social distancing. While social distancing in itself has brought many discomforts to the general public, its effect on the hearing-impaired community has been manifold. Many of them are left with very few authentic sources of information on the virus. In this context, the World Health Organisation (WHO) has uploaded a course on ‘Introduction to Covid-19’, in Indian Sign Language (ISL), ensuring accessibility to the deaf community. The course is available on the Massive Open Online Course platform of WHO (OpenWHO). The video in sign language has been developed by ISL interpreter Vinayachandran B S, a native of Thiruvananthapuram.

As per the 2011 Census, 2.68 crore Indians were found to be disabled out of a population of 121 crore. Of the total number of disabled, 19 per cent were registered as hearing-impaired. The Indian Sign Language is a mother tongue of sorts for the community, even though technological advancements such as hearing aids have made it possible for the deaf to communicate. The course can be utilised by deaf community and rehabilitation professionals across the country. Uploaded in May, the course has over 40,000 enrolments so far.

“There was a barrage of misinformation about the pandemic. The hearing-impaired community is one that is at a risk of imbibing such information. Hence I wrote to the WHO about the possibility of making verified information available in ISL. Their response was immediate and there was constant support throughout the process. The video in sign language also has voice-over in Hindi, to make it accessible for all,” said Vinayachandran who is currently working on two more videos to be added to the course. He had also been preparing the Covid-19 news bulletin for NISH, Thiruvananthapuram for three months since the outbreak of pandemic. The one-of-a-kind initiative of the institute ensured that there were daily news updates on the situation for the deaf community.

“Information being circulated by various agencies on the frontlines of combating the pandemic is in print format. The deaf community has relatively poor literacy skills making this information obsolete for them. ISL is the main medium of communication for a majority, hence such a video on the platform of WHO will help a large number of disabled people as well as professionals,” said Dr Sumi Mathew, director of Ali Yavar Jung National Institute of Speech and Hearing Disabilities, Mumbai.The Rehabilitation Council of India has taken an initiative to promote WHO courses on Covid-19 among RCI’s approved institutions and certified rehabilitation professionals.

Sunday, June 21, 2020

Ranveer Singh campaigns to make sign language official in India: What is the ISL?

25.05.2020
The sign language is a system of communication using gestures, signs and facial experiences used by the deaf people in India. There have been demands to make the Indian Sign Language the 23rd official language.


Leading actor in Hindi cinema Ranveer Singh is campaigning for the Indian Sign Language (ISL) to be declared as an official language in the nation. Ranveer plans to sign an official petition filed by the National Association of Deaf (NAD), with the support of Access Mantra Foundation, to increase awareness. He urged people to show their support for the cause. Ranveer also released Spitfire’s Vartalap, a sign-language video under his label IncInk.

There are 22 official languages recognised in India and Ranveer’s campaign is towards making ISL the 23rd official language. "I urge my fellow Indians to join this cause and give it momentum by building awareness about it. We are also releasing our first sign language video on Spitfire's latest track 'Vartalap' with the hope that the track will trigger more conversations on the issue," he said in his appeal.

Ranveer’s appeal takes forward NAD’s demand to make the ISL an official language by an amendment in the Constitution of India. Earlier, the NAD made the inclusion of an interpreter on DD national possible.
What is sign language?

The sign language is a system of communication that uses gestures and signs, as used by the hearing-impaired people. The Indian Sign Language is commonly used among the deaf people in India. There are 18 million deaf persons in India for whom the sign language is their first language as opposed to a written language.

ISL Dictionary

The ISL has evolved in the last 100 years. The Indian Sign Language Research and Training Centre (ISLRTC) launched the second edition of the Indian Sign Language Dictionary last year on February, 27. It includes 6,000 words under the categories of academic, legal, medical, technical and everyday terms. The dictionary was developed by ISLRTC under the Department of Empowerment of Persons with Disabilities, Ministry of Social Justice & Empowerment. The first edition of the dictionary with 3,000 words was launched in March 2018.

There are 20 lakh deaf children in India, of whom 12 lakh are enrolled in more than 500 schools. Most teachers do not use Indian Sign Language as their primary language to teach deaf children but speak and gesture with their hands, which deaf students often do not understand them. Consequently, they fall behind in studies. Giving ISL the 23rd official language of India, would give deaf students access to information from parents and teachers in school and at home. It would also enable and empower the states and UTs to have a team of qualified interpreters who can interpret for the deaf people.

Saturday, May 9, 2020

ஊரடங்கு: அவசர பாஸ் பெறுவதில் நடைமுறை சிக்கல்! காதுகேளாத,வாய்பேச முடியாத தம்பதிகள்


நெல்லை கே.டி சி நகரை சேர்ந்த காதுகேளாத,வாய்பேச முடியாத விக்னேஷ்வரி-மாரீஸ்வரன் தம்பதியினர் சிரமப்பட்டனர். விக்னேஷ்வரியின் தந்தை செங்கோட்டையில் உயிரிழந்த நிலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் ஆன்லைன் விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்தும் அனுமதி கிடைக்காமல் கண்ணீருடன் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் காத்திருந்த தம்பதிகளை அங்கு பணியிலிருந்து காவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயிற்சி ஆட்சியரிடம் அழைத்து சென்று நடந்ததை சொல்லி அரசு செலவில் வாகனம் ஏற்பாடு செய்து ஈமசடங்கிற்கு அனுப்பி வைத்தனர்

காதுகேளாத மாற்றுத்திறனாளி பெற்றோருடன் முடங்கிய குழந்தை : மீட்டெடுத்த அரசு அதிகாரிகள்..!




வாய்பேச முடியாதோருக்கு பிரத்யேக முகக்கவசம்... திருச்சியை சேர்ந்த இளம் மருத்துவரின் புதிய முயற்சி

09.05.2020
திருச்சி: வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோர் தங்கள் உணர்வை வாய் சைகை மூலம் பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில் அவர்களுக்காக பிரத்யேக முககவசத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இளம் மருத்துவர் ஒருவர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மருத்துவர் ஹக்கீம். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள இவர் தற்போது திருச்சியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோருக்காக மனிதநேய அடிப்படையில் பிரத்யேக முகக்கவசத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிந்துகொண்டால் சைகை மூலம் அவர்கள் கூற வருவதை பிறரால் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இதற்காக இப்போது உள்ள சூழலில் வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணியாமலும் இருக்க முடியாது. கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைக் கருத்தில்கொண்ட மருத்துவர் ஹக்கீம், என்.95 மாஸ்கில் உள்ள சில பகுதியை நீக்கிவிட்டு அதற்கு பதில் லேடிக்ஸ் 3 காகிதத்தை (latex 3 paper) இணைத்துள்ளார். இதன் மூலம் வாய்பேச முடியாதோரின் சைகைகளையும், வாய் அசைவுகளையும் மூலம் எளிய முறையில் பிறர் புரிந்துகொள்ள முடியும். நல்ல செய்தி.. கொரோனா இறப்பு விகிதம்.. தமிழகத்தில் மிக மிக குறைவு.. எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா? இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் ஹக்கீம், லேடிக்ஸ் 3 காகிதத்தை பொறுத்தவரை மூச்சுவிடுவதற்கு எந்த சிரமும் இருக்காது என்றும், மற்ற ஜரிகைகள், பிளாஸ்டிக் பைகளை போன்று லேடிக்ஸ் 3 காகிதத்தில் fog படியாது எனவும் தெரிவித்தார். முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பிரத்யேக முறையில் 1,000 முககவசம் தயாரித்து அதனை வாய்பேச முடியாதோர் மற்றும் செவிதிறனற்றோருக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே இந்த இளம் மருத்துவர் ஹக்கீமின் தந்தை பிரபல நரம்பியல் நிபுணர் அலீம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாகவும் இருந்திருக்கிறார்.

காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

07.05.2020
விழுப்புரம்; விழுப்புரம், மந்தக்கரை, புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சேர்க்கை நடக்கிறது.தமிழக அரசின் அனுமதி பெற்ற இந்த பள்ளியில், கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஆகிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், விழுப்புரம், மாம்பழபட்டு ரோடு, இந்திரா நகரில் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் நடக்கிறது.இங்கு, நரிக்குறவர்கள் பிள்ளைகள், கல் அறுக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பிள்ளைகள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, தங்குமிடம், புத்தகம், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலை பள்ளி ஆதரவற்ற சிறுவர்கள் விடுதி திறக்க எந்த தடையும் இல்லை. கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பம் பெற வருவோரை போலீஸ் எந்த தடையும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜெயராஜ், 23, எப், ரஹிம் லே-அவுட், பழைய பஸ் நிலையம் பின்புறம், விழுப்புரம் என்ற முகவரியில் பெறலாம்.இது சம்பந்தமான விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443879401, தொலைபேசி 04146 224417 ஆகிய எண்களிலும், இணையதளம் www.amtti.org. www.stjohnsociety.org தெரிந்து கொள்ளலாம்.

Monday, April 6, 2020

கொரோனா அச்சுறுத்தல்: அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு..!

வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.

தமிழகத்தில் அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல தங்களை முழுமையாக தனிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் அன்றாட சுய பாதுகாப்பு பணிகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து வழக்கமான உதவி தேவைப்படுகிறது.

மேலும், மளிகைப் பொருள்களை வைப்பது சில ஊனமுற்றோருக்குச் செய்வது கடினம். மேலும் அவர்கள் போக்குவரத்துக்கு மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கக்கூடிய நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்றுநோய் பரவுதலில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இது இயல்பான மனிதர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும்? கைகளை எங்கும் தொடாதீர்கள், பிறருக்கு கை கொடுக்காதீர்கள் என கூறும் நிலையில் அவர்களுக்கு கைகள் தான் கண்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன.

இதற்காக சென்னை கே கே நகரில் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்ணுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாய் பேச முடியாத காது கேளாதோர் அந்த கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல sign language interpretor இருக்கின்றனர்.மேலும் வீடியோ கால் மூலமாக அழைப்பவர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் என்னென்ன அரசு அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வு செய்தி போன்றவை sign language interpretor ரூத் எபினேசன் பதில் அளிக்கிறார். இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் பயன்பாட்டில் உள்ளது.

வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.

தினமும் 1000-1500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் 50-70 அழைப்புகள் வாய் பேச முடியாத காது கேளாதோர்களாக இருக்கின்றனர். மேலும் கண் தெரியாதவர்களுக்கு அவர்களுக்கு உதவி புரிபவர்களாக இருப்பவர்கள் வீடியோகால் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் கேட்டு அறிந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானிடாம் அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அதை தங்களது உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

05.04.2020
புதுச்சேரி; மாற்றுத்திறனாளிகள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குநர் அசோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவிட் -19 சூழ்நிலை காரணமாக மாற்றுத்திறனாளிகளின் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர கால உதவி தேவைப்பட்டால், 94430 80954, 97916 31555, 94434 88322 மற்றும் 94422 79550 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இதர மாற்றுத்திறனாளிகள் தங்களின் அவசர கால உதவிக்கு 96002 19478 மற்றும் 94439 59800 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் தனிநபர்களுக்கு உள்ளூர் இயக்கத்திற்கான அனுமதி சீட்டு பெற http://forms.gle/kk4b8MQCgbZAUKbc8 என்ற இணைப்பிணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 75983 89108, 82484 53481 ஆகிய மொபைல் எணகளில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.