FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, September 5, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி

04.09.2025 
சிவகங்கை:மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த 160 கள பணியாளர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

மாவட்ட அளவில் வீடு தோறும் ஆய்வுக்கு சென்று, அங்கு மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களுக்கு அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, உப கரணங்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் மாற்றுத் திறனாளியாக இருந்து பதிவு செய்யாமல் விட்டு போனவர்கள் குறித்த விபரங்களை கையடக்க கணினியில் சேகரித்து, அவர்களுக்கு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான கருவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட அளவில் 160 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தின் கீழ் வீடு தோறும் சென்று அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

விழாவில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட திட்ட அலுவலர் (மாற்றுத்திறனாளி உரிமை திட்டம்) அழகுமன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment