FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 5, 2025

காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு



02.09.2025 மைசூரு : ''காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தை நிர்வகித்து வரும் மகளிரின் சேவை பாராட்டுக்குரியது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

மைசூரு மானச கங்கோத்ரி கல்வி வளாகம் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தின் வைர விழாவை நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சியில் தொடர்ந்து சேவை செய்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையம், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. 1965ல் துவக்கப்பட்ட இம்மையம், 60 ஆண்டுகளாக இத்துறையில் சாதனை படைத்து வருகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தை பல ஆண்டுகளாக பெண்களே நிர்வகித்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இம்மையத்தின் இன்றைய இயக்குநர் புஷ்பலதாவின் சேவை பாராட்டத்தக்கது.

இம்மையம் துவங்க காரணமான அன்றைய மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையார், நிலம் வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று அவரது குடும்பத்தின் வாரிசு யதுவீர் உடையார், விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

புள்ளி விபரங்கள்படி, 2023ல் இந்தியாவில் 6 கோடி பேர் வாய் பேச முடியாமல், காது கேட்காத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் இவர்கள் நவீன கருவிகளை பயன்படுத்தி, தங்களின் பிரச்னையை தீர்க்கலாம்.

காது கேட்கும் கருவிகளை தயாரிப்பதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக செய்கை மொழி தினத்தை ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment