FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, September 5, 2025

Cochlear Treatment: அதி நவீன சிகிச்சையில் சாதனை!! நெகிழ வைத்த அரசு மருத்துவரின் அன்பு உள்ளம்...


02.09.2025 
Cochlear Treatment| காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் பலருக்கு கேட்கும் திறனை மீட்டெடுத்த சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை தலைவர்.

காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 140 பேருக்கு நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அசத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 140 காது கேளாத, வாய் பேச இயலாத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து மருத்துவத்துறை தலைவர் அசத்தியுள்ளார். யார் அந்த மருத்துவர் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் செய்த சாதனை என்ன என்பதுகுறித்து பார்க்கலாம்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் நாகசுப்ரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறையை சரி செய்துள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான காது கேட்கும் சக்தி மற்றும் வாய் பேசும் திறனை திரும்ப பெற்று தந்துள்ளார்.


No comments:

Post a Comment