FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 18, 2024

புஷ்பா 2 பார்வை செவித்திறன் குறைபாடுடையோருக்காக திரையரங்குகளில் சிறப்பு வசதி




05.12.2024
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை(டிச. 5) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், புஷ்பா-2 திரைப்படத்தை கண் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, புஷ்பா படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது; இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தை இப்போது ஒவ்வொருத்தரும் பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்.

புஷ்பா-2 திரைப்படத்தை பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய பார்வையாளர்களும் திரையரங்குகளில் பார்க்க முடியும். இதற்காக 'கிரேட்டா செயலியில் ஒலி விரிவாக்கங்கள் மற்றும் எழுத்துக் குறிப்புகள் (சப் டைட்டில்ஸ்) ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த வசதியை பயன்படுத்த, அவர்கள் செயலியை தரவிறக்கம் செய்து. அதில் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கொண்டு, புஷ்பா படத்தை மேற்கண்ட வசதிகளுடன் தங்களுக்கேற்றாற்போல் அமைத்து படத்தைக் கண்டு மகிழலாம் எனத் தெரிவித்துள்ளது.




சென்னையில் ரூ. 50 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திறன் பயிற்சி மையம் - அமைச்சர் தகவல் - CHENNAI SKILL TRAINING CENTER



சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

13.12.2024 சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: '' இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். மேலும், அவர் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள், அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75 சதவீதம் பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

என்னென்ன பயிற்சிகள்:

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2023-2024 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் உயர் கல்வித் துறையின் மூலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல் (Wireman control Panel Electronics), மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் (Wiring Harness Assembly Operator) ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது.

சேர்க்கை தகுதி:

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச் சான்றிதழ் (National Trade Certificate) பெற்ற மாற்றுத்திறனாளிகள், அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட இரு பாடப் பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்குப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர் கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும்'' என கூறியுள்ளார்.



மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



13.12.2024 சென்னை: மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.50.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள், அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75% பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, 2023-2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி “செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க உயர்கல்வித் துறையின் மூலம் ரூ.50.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல் (Wireman control Panel Electronics), மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் (Wiring Harness Assembly Operator) ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச்சான்றிதழ் (National Trade Certificate) பெற்ற மாற்றுத்திறனாளிகள் அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட இரு பாடப்பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்குப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர்கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.




Sunday, December 15, 2024

குழந்தைகளுக்காக தூத்துக்குடியில் கனிமொழி எம்பி துவங்கிய திட்டம்.. செவித்திறன் குறைபாட்டுக்கு குட்பை



15.12.2024 
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யும் வகையிலான திட்டத்தை திமுகவின் கனிமொழி எம்பி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை முறையில் சரிசெய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி எம்பியாக திமுகவின் கனிமொழி உள்ளார். பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறன் பரிசோதனை (Universal Newborn Hearing Screening அல்லது UNHS Program - "Hearing for Life" திட்டத்தை முன்னோடி திட்டமாக கனிமொழி எம்பி தலைமையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதாவது சென்னையை தளமாகக் கொண்ட Hearing for Life எனும் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சேவைகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். செவித்திறன் குறைபாடு இல்லாத மாநிலம் என்ற இலக்கை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குக் கனிமொழி எம்பி தலைமை தாங்கினார்.

 பாதிப்பு எவ்வளவு: 2023 ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல் வரை பதிவு செய்யப்பட்ட தரவுகளில் 25.45% செவித்திறன் குறைபாடு உள்ளது. பிறப்புக்காலத்தில் கண்டறியப்படாவிட்டால், இது குழந்தையின் பேச்சு, மொழி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும், மேலும், இதனால் பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தடைகள் ஏற்படும்.

பெரும்பாலான குறைபாடுகளைப் போல இல்லாமல், செவித்திறன் குறைபாடு சரியான நேரத்தில் மற்றும் முறையான சிகிச்சையுடன் முற்றிலும் சரி செய்யக்கூடியது. ஆரம்பக்காலத்தில் மற்றும் குறித்த நேரத்தில் செவித்திறனைக் கண்டறிதல், குழந்தைகளுக்கு வயது பொருந்தும் பேச்சு மற்றும் மொழி திறன்களை வளர்க்க உதவும், மேலும் வழக்கமான கல்வியில் சேர்க்க உதவும். 

இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யத் தேவையான அனைத்தையும் மற்றும் பங்கு கொள்பவர்கள் இடையேயான ஒத்துழைப்பையும் கனிமொழி கருணாநிதி உறுதி செய்தார். சென்னையை தளமாகக் கொண்ட Hearing for Life அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சேவைகள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைத்து இந்த திட்டம் சீராக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Hearing for Life அறக்கட்டளையை ஒருங்கிணைப்பதன் மூலமும், உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து கனிமொழி மேற்கொண்ட இந்த முன்முயற்சியால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் சரியான நேரத்தில் செவித்திறன் திரையிடலைப் பெறுவதை உறுதிசெய்யும் முயற்சியில் அவர் முன்னோடியாக விளங்குகிறார். இந்த முயற்சியானது, குழந்தைகளுக்குச் சிறந்த வளர்ச்சியினை நோக்கிய பாதையை உருவாக்க வழிகோலுகிறது. 

நோக்கம்: ஆரம்பக்காலத்தில் விரைவில் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை: 12 மாதங்களுக்குள் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அதற்கான சரியான மருத்துவ சேவைகளை அளிக்க வேண்டும். அப்போது, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஐந்து வயதிற்குள் சாதாரண செவித்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இணையான பேச்சு மற்றும் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள இயலும்.

குழந்தைகளை பொதுவான கல்வி முறைகளுக்கு இணைத்துக்கொண்டு, அவர்களைப் போட்டியிடும் குடிமக்களாக உருவாக்க வேண்டும். குழந்தை செவித்திறன் (JCIH) தரநிலைகளுக்கான கூட்டுக் குழுவின் உள்கட்டமைப்பு, வளங்கள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முன்னோடித் திட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

யாருக்கெல்லாம் பரிசோதனை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புதிதாகப் பிறந்த அனைத்து குழந்தைகளும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஓட்டோ அகவுஸ்டிக் எமிஷன்ஸ் (OAE) மற்றும் ஆடிட்டரி ப்ரைன்ஸ்டெம் ரெஸ்பான்ஸ் (ABR) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செவித்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஓஏஇ செவிவழி தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் வகையில் உள் காதில் உற்பத்தி செய்யப்படும் ஒலி அலைகளை அளந்து, அதே நேரத்தில் ABR ஒலிகளுக்கு மூளையின் பதில் மதிப்பீடு செய்யப்படும். 

கண்காணிப்பு எப்படி: ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு திரையிடல்களின் முடிவுகளைக் கண்காணிக்கும். திரையிடப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் டிஜிட்டல் பதிவுகள் பராமரிக்கப்படும், இது நிகழ் நேரக் கண்காணிப்பு மற்றும் பின்தொடர்பு செயற்பாடுகளை மேற்கொள்ள உதவும். மாதாந்திர பரிசீலனைகள், நோய் கண்டறிதல் மற்றும் முன்னேற்றங்களை உறுதி செய்யும். செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பின் தீவிரத்தின் அடிப்படையில் கேட்கும் கருவிகள் வழங்கப்படும். கருவிகள் கொடுக்கப்பட்ட பிறகு உடனடியாக பேச்சு மற்றும் மொழி சிகிச்சை தொடங்கப்படும். 

எதிர்கால பார்வை: தூத்துக்குடியில் முன்னெடுக்கப்பட்ட UNHS முன்னோடி திட்டம், இந்தியாவிற்கு ஒரு முன்னுதாரணமாக மாறும் நோக்கில் இருக்கிறது. வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம், இந்த மாதிரி மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விரிவாக்கப்பட முடியும். இது நாடு முழுவதும் செவித்திறன் குறைபாடு மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான அணுகுமுறையில் ஒரு புரட்சி ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான உறுப்பினராக வளரவும், செழிக்கவும் வாய்ப்புள்ளது என்பதை உறுதிசெய்வதில் இந்த முயற்சி ஒரு முக்கியமான படிநிலை ஆகும்.

 யுனிவர்சல் நியூபார்ன் ஹியர்ரிங் ஸ்கிரீனிங் (UNHS) திட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன, இது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், இது அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக உள்ளது, 95-98% ஆரம்ப கண்டறிதல் விகிதத்துடன், உடனடியாக சிகிச்சையாக்கப்பட்டால், பெரும்பாலான குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற மொழி திறன்களை வளர்க்க உதவுகிறது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையானது கடுமையான நெறிமுறைகள் மற்றும் பின்தொடர்தல்களைப் பயன்படுத்துகிறது, இது ஒரு உலகளாவிய தரநிலையாக அமைந்துள்ளது. பிரேசில், பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், ஒலியியல் மையங்கள் மற்றும் சமூக மயமாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புடன் மேம்பட்ட செவிப்புலன் சேவையைக் கொண்டுள்ளது. நைஜீரியாவில், முன்னோடி திட்டங்கள் காதுகேளாமை மற்றும் பிறந்த குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் UNHS உதவும் திறனைக் காட்டியுள்ளன. 

இந்தியா தனது தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (NRHM) உடன் UNHS ஐ ஒருங்கிணைத்து, செவித்திறனை ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் தலையீட்டிற்கான பாதுகாப்பு வலுவை வழங்குகிறது. இருப்பினும், இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் தகுந்த ஊழியர்களின் பற்றாக்குறை, கட்டமைப்பின் குறைபாடு மற்றும் வளங்களின் வரம்புகள் போன்ற சவால்கள் உள்ளன. 

இந்த பிரச்சினைகள் நிலையான செயல்பாட்டைத் தடுக்கும், (ஏஏபிஆர்) போன்ற சிறிய தொழில்நுட்பங்கள் நம்பிக்கைக்குரிய தீர்வுகளை வழங்கினாலும், இந்தச் சிக்கல்கள் சீரான செயலாக்கத்தைத் தடுக்கிறது. வெற்றிகரமான திட்டங்களில் பொதுவான காரணிகள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் ஆரம்பக்கால நோயறிதல் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான வலுவான தொடர் சிகிச்சை அளிக்க இது போன்ற திட்டங்கள் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டர் மோகன் காமேஸ்வரன்

நெருங்கிய உறவில் திருமணம் பரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு



10.12.2024 
சென்னை: நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்குதொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் 'குட் டீட்' எனப்படும் தன்னார்வ அமைப்பு, காது கேளாத 18 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு, 30 செவித்திறன் கருவிகள் சென்னையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப் பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டர் மோகன் காமேஸ்வரன், நிகழ்வில் பேசியது:

உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். அறிவு வளர்ச்சி குறைந்துவிடும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால் அப்துல் கலாம் போன்று உருவெடுக்க வேண்டிய பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் இந்திரா மோகன் காமேஸ்வரன், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





குழந்தை பிறப்பிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம் என மக்களவை உறுப்பினர் கனிமொழி

 



07.12.2024

குழந்தை பிறப்பிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம், தனியார் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 6 பேர் செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றனர். குழந்தைகள் பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களுடைய செவித்திறனை மேம்படுத்த முடியும்.


செவித்திறன் இழந்த ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய சன் டி.வி. ரூ.1 கோடி நிதியுதவி



20.11.20214 
செவித்திறன் இழந்த மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் டி.வி. குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சன் டி.வி. ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் சன் டி.வி. குழுமம் சார்பில், மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள் ஆனந்த் குமார், ஜெகநாதன், இந்திரா காமேஸ்வரன், உமா மகேஸ்வரி கலந்துகொண்டனர். இந்த நிதியின் மூலம் பிறவியிலேயே செவித்திறன் இழந்த மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட 11 ஏழைக் குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்லாண்ட், ஆடிட்டரி ப்ரைன் ஸ்டெம் இம்ப்லாண்ட், போன் பிரிட்ஜ் இம்ப்லாண்ட் உள்ளிட்ட நவீன அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டி.வி.யும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Saturday, December 14, 2024

இலங்கை காது கேளாதோர் கிரிக்கெட் அணி தொடர் ஒன்றாக்காக இந்தியா புறப்பட்டு சென்றுள்ளது

 

01.12.2024 இலங்கை காது கேளாதோர் கிரிக்கெட் அணி தொடர் ஒன்றாக்காக இந்தியா புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த தொடருக்காக கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் நேற்று தங்களது இறுதி பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் இந்திய காதுகேளாதோர் கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் இணையும் இலங்கை காதுகேளாதோர் அணியில் 15 வீரர்கள் உள்ளனர்.

இந்த அணிணை கிமந்து மெல்கம் தலைமை தாங்குகிறார்.

உஷாந்த குணரத்ன தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும், ஹேமஜித் குமார காது கேளாதோர் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் போட்டி: 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து



13.12.2024
சென்னை: ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்கள் வென்றதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- மலேசியாவில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் குவித்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம். பதக்கங்களை வென்ற தம்பிகள் மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இப்போட்டியில் பங்கேற்க உதவிடும் வகையில், நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும், - 'எலைட்' திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர் - வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம். நம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம், அவர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.