FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, December 15, 2024

குழந்தை பிறப்பிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம் என மக்களவை உறுப்பினர் கனிமொழி

 



07.12.2024

குழந்தை பிறப்பிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம், தனியார் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 6 பேர் செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றனர். குழந்தைகள் பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களுடைய செவித்திறனை மேம்படுத்த முடியும்.


No comments:

Post a Comment