FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, December 15, 2024

நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டர் மோகன் காமேஸ்வரன்

நெருங்கிய உறவில் திருமணம் பரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு



10.12.2024 
சென்னை: நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்குதொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் 'குட் டீட்' எனப்படும் தன்னார்வ அமைப்பு, காது கேளாத 18 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு, 30 செவித்திறன் கருவிகள் சென்னையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப் பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டர் மோகன் காமேஸ்வரன், நிகழ்வில் பேசியது:

உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். அறிவு வளர்ச்சி குறைந்துவிடும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால் அப்துல் கலாம் போன்று உருவெடுக்க வேண்டிய பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் இந்திரா மோகன் காமேஸ்வரன், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment