FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, December 18, 2024

சென்னையில் ரூ. 50 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திறன் பயிற்சி மையம் - அமைச்சர் தகவல் - CHENNAI SKILL TRAINING CENTER



சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

13.12.2024 சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: '' இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். மேலும், அவர் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள், அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75 சதவீதம் பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

என்னென்ன பயிற்சிகள்:

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2023-2024 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் உயர் கல்வித் துறையின் மூலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல் (Wireman control Panel Electronics), மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் (Wiring Harness Assembly Operator) ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது.

சேர்க்கை தகுதி:

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச் சான்றிதழ் (National Trade Certificate) பெற்ற மாற்றுத்திறனாளிகள், அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட இரு பாடப் பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்குப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர் கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும்'' என கூறியுள்ளார்.



No comments:

Post a Comment