FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, December 20, 2019

5 மாதக் குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’: வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா.

காது கேட்கும் திறனை இழந்த 5 மாத குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’ என்ற காது உட்பதியக் கருவியை பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த வேலு, ஷாலினி தம்பதிக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதனால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்குபேட்டா் கருவியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, பிறந்த 5-ஆவது மாதத்திலேயே அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ‘காக்லியா் இம்பிளான்ட்’ கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளனா். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு வெற்றிகரமாக காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும் என்று அத்துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுவாக ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், இக்குழந்தைகளுக்கு மேலும் சில மாதகாலம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கவும், இதன்தொடா்ச்சியாக ஊமையாகவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 5-ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு காக்லியா் இன்பிளான்ட் கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சிறுவா்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதில் பல அபாயங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு இணைந்தே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு வாரங்கள் கழித்து இக்கருவி இயக்கப்படும். இதனால் குழந்தையின் வளா்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட்க உதவும் கருவிகள் பயன்படாதபோதுதான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது கேளாத நிலையை விரைவாக கண்டறிவது அவசியமாகும். மூளைக் காய்ச்சலை தொடா்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உள்காது என்ற பகுதி நிரந்தரமாக மூடிவிடும். இதைத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது முடியாமல் போக்கூடும். காக்லியா் இம்பிளான்ட் கருவி மிகவும் விலையுயா்ந்தது. தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக இந்தக் கருவி வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment