FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, December 20, 2019

5 மாதக் குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’: வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா.

காது கேட்கும் திறனை இழந்த 5 மாத குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’ என்ற காது உட்பதியக் கருவியை பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த வேலு, ஷாலினி தம்பதிக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதனால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்குபேட்டா் கருவியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, பிறந்த 5-ஆவது மாதத்திலேயே அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ‘காக்லியா் இம்பிளான்ட்’ கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளனா். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு வெற்றிகரமாக காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும் என்று அத்துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுவாக ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், இக்குழந்தைகளுக்கு மேலும் சில மாதகாலம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கவும், இதன்தொடா்ச்சியாக ஊமையாகவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 5-ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு காக்லியா் இன்பிளான்ட் கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சிறுவா்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதில் பல அபாயங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு இணைந்தே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு வாரங்கள் கழித்து இக்கருவி இயக்கப்படும். இதனால் குழந்தையின் வளா்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட்க உதவும் கருவிகள் பயன்படாதபோதுதான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது கேளாத நிலையை விரைவாக கண்டறிவது அவசியமாகும். மூளைக் காய்ச்சலை தொடா்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உள்காது என்ற பகுதி நிரந்தரமாக மூடிவிடும். இதைத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது முடியாமல் போக்கூடும். காக்லியா் இம்பிளான்ட் கருவி மிகவும் விலையுயா்ந்தது. தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக இந்தக் கருவி வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment