FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, December 20, 2019

5 மாதக் குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’: வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா.

காது கேட்கும் திறனை இழந்த 5 மாத குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’ என்ற காது உட்பதியக் கருவியை பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த வேலு, ஷாலினி தம்பதிக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதனால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்குபேட்டா் கருவியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, பிறந்த 5-ஆவது மாதத்திலேயே அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ‘காக்லியா் இம்பிளான்ட்’ கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளனா். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு வெற்றிகரமாக காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும் என்று அத்துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுவாக ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், இக்குழந்தைகளுக்கு மேலும் சில மாதகாலம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கவும், இதன்தொடா்ச்சியாக ஊமையாகவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 5-ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு காக்லியா் இன்பிளான்ட் கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சிறுவா்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதில் பல அபாயங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு இணைந்தே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு வாரங்கள் கழித்து இக்கருவி இயக்கப்படும். இதனால் குழந்தையின் வளா்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட்க உதவும் கருவிகள் பயன்படாதபோதுதான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது கேளாத நிலையை விரைவாக கண்டறிவது அவசியமாகும். மூளைக் காய்ச்சலை தொடா்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உள்காது என்ற பகுதி நிரந்தரமாக மூடிவிடும். இதைத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது முடியாமல் போக்கூடும். காக்லியா் இம்பிளான்ட் கருவி மிகவும் விலையுயா்ந்தது. தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக இந்தக் கருவி வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment