FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 20, 2019

5 மாதக் குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’: வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா.

காது கேட்கும் திறனை இழந்த 5 மாத குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’ என்ற காது உட்பதியக் கருவியை பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த வேலு, ஷாலினி தம்பதிக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதனால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்குபேட்டா் கருவியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, பிறந்த 5-ஆவது மாதத்திலேயே அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ‘காக்லியா் இம்பிளான்ட்’ கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளனா். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு வெற்றிகரமாக காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும் என்று அத்துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுவாக ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், இக்குழந்தைகளுக்கு மேலும் சில மாதகாலம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கவும், இதன்தொடா்ச்சியாக ஊமையாகவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 5-ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு காக்லியா் இன்பிளான்ட் கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சிறுவா்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதில் பல அபாயங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு இணைந்தே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு வாரங்கள் கழித்து இக்கருவி இயக்கப்படும். இதனால் குழந்தையின் வளா்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட்க உதவும் கருவிகள் பயன்படாதபோதுதான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது கேளாத நிலையை விரைவாக கண்டறிவது அவசியமாகும். மூளைக் காய்ச்சலை தொடா்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உள்காது என்ற பகுதி நிரந்தரமாக மூடிவிடும். இதைத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது முடியாமல் போக்கூடும். காக்லியா் இம்பிளான்ட் கருவி மிகவும் விலையுயா்ந்தது. தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக இந்தக் கருவி வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment