FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, December 20, 2019

இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத்தை பாருங்க!

10.12.2019
காது கேளாத ஒரு குழந்தைக்கு காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்படுகிறது. தன் அம்மா பேசுகிறாள். இந்த உலகில் அந்த பச்சிளம் பெண் குழந்தை கேட்கும ஒலி தன் அம்மாவினுடையது. எப்படி இருக்கும்… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது குழந்தை.

ஜியார்ஜினா என்னும் பெயருடைய அந்த குழந்தையின் அப்பா ஹாரோகேட், தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எங்கள் மகளின் காது கேட்கும் இயந்திரத்தை ஆன் செய்தபோது,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் அம்மா லூசி பேசுவதை கேட்கும் ஜியார்ஜினா, எழுப்பும் சத்தம், இசைபோல எங்கும் நிறைக்கிறது.

தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, ஜியார்ஜினாவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்று கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு, காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் தன் மகள், சத்தம் கேட்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்பதை ஜியார்ஜினாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் மட்டும் ஜியார்ஜினாவின் வீடியோவுக்கு 7 லட்சம் வியூஸ். பலரும் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.

“காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்தினால், ஒரு லைட் பல்பு ஆன் செய்யப்பட்டதுபோல இருக்கிறது அவளுக்கு. மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.

இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.

இப்படி இயந்திரம் பொருத்தப்படுவதால் ஜியார்ஜினா மிகவும் மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமுடனும் மாறுகிறாள்,” என்கிறார் ஜியார்ஜினாவின் தந்தை ஆடிசன் ஆனந்தம் ததும்ப.




No comments:

Post a Comment