FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 20, 2019

இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத்தை பாருங்க!

10.12.2019
காது கேளாத ஒரு குழந்தைக்கு காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்படுகிறது. தன் அம்மா பேசுகிறாள். இந்த உலகில் அந்த பச்சிளம் பெண் குழந்தை கேட்கும ஒலி தன் அம்மாவினுடையது. எப்படி இருக்கும்… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது குழந்தை.

ஜியார்ஜினா என்னும் பெயருடைய அந்த குழந்தையின் அப்பா ஹாரோகேட், தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எங்கள் மகளின் காது கேட்கும் இயந்திரத்தை ஆன் செய்தபோது,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் அம்மா லூசி பேசுவதை கேட்கும் ஜியார்ஜினா, எழுப்பும் சத்தம், இசைபோல எங்கும் நிறைக்கிறது.

தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, ஜியார்ஜினாவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்று கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு, காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் தன் மகள், சத்தம் கேட்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்பதை ஜியார்ஜினாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் மட்டும் ஜியார்ஜினாவின் வீடியோவுக்கு 7 லட்சம் வியூஸ். பலரும் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.

“காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்தினால், ஒரு லைட் பல்பு ஆன் செய்யப்பட்டதுபோல இருக்கிறது அவளுக்கு. மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.

இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.

இப்படி இயந்திரம் பொருத்தப்படுவதால் ஜியார்ஜினா மிகவும் மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமுடனும் மாறுகிறாள்,” என்கிறார் ஜியார்ஜினாவின் தந்தை ஆடிசன் ஆனந்தம் ததும்ப.




No comments:

Post a Comment