FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, December 20, 2019

இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத்தை பாருங்க!

10.12.2019
காது கேளாத ஒரு குழந்தைக்கு காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்படுகிறது. தன் அம்மா பேசுகிறாள். இந்த உலகில் அந்த பச்சிளம் பெண் குழந்தை கேட்கும ஒலி தன் அம்மாவினுடையது. எப்படி இருக்கும்… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது குழந்தை.

ஜியார்ஜினா என்னும் பெயருடைய அந்த குழந்தையின் அப்பா ஹாரோகேட், தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எங்கள் மகளின் காது கேட்கும் இயந்திரத்தை ஆன் செய்தபோது,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் அம்மா லூசி பேசுவதை கேட்கும் ஜியார்ஜினா, எழுப்பும் சத்தம், இசைபோல எங்கும் நிறைக்கிறது.

தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, ஜியார்ஜினாவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்று கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு, காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் தன் மகள், சத்தம் கேட்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்பதை ஜியார்ஜினாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் மட்டும் ஜியார்ஜினாவின் வீடியோவுக்கு 7 லட்சம் வியூஸ். பலரும் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.

“காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்தினால், ஒரு லைட் பல்பு ஆன் செய்யப்பட்டதுபோல இருக்கிறது அவளுக்கு. மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.

இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.

இப்படி இயந்திரம் பொருத்தப்படுவதால் ஜியார்ஜினா மிகவும் மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமுடனும் மாறுகிறாள்,” என்கிறார் ஜியார்ஜினாவின் தந்தை ஆடிசன் ஆனந்தம் ததும்ப.




No comments:

Post a Comment