FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, December 21, 2019

உ.பியில் கொடூரம்! காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

09.12.2019
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னாலே, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் இருந்த பதின் வயது சிறுமியை ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியே சென்று விட, காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தாயார் மொட்டை மாடியில் இருந்துள்ளார். இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த சர்வேஷ் ராவத் என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கிடையே, சிறுமியின் தாய் இதைப்பார்த்து மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

இதன்பின்னர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சர்வேஷ் மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேஷ் ராவத்(32). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் தற்போது, கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment