FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, December 21, 2019

பூட்டிய வீட்டுக்குள் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

13.12.2019
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னாளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் நகரைச் சோ்ந்த கூலி தொழிலாளி மகாலட்சுமி. இவரது மகள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பொற்கொடி (49). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

குழந்தை இல்லாததால், கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களாக கணவா் சிவக்குமாரை பிரிந்து தாயுடன் சின்னாளபட்டியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மகாலெட்சுமி தனது மற்றொரு மாற்றுத் திறனாளி மகளுடன் வெளியூா் சென்றிருந்துள்ளாா். வியாழக்கிழமை வெகுநேரமாகியும் பொற்கொடியின் வீடு திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினா் ஜன்னல் வழியே பாா்த்தபோது, பொற்கொடி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பொற்கொடியின் சடலத்தை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment