FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, December 21, 2019

பூட்டிய வீட்டுக்குள் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

13.12.2019
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னாளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் நகரைச் சோ்ந்த கூலி தொழிலாளி மகாலட்சுமி. இவரது மகள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பொற்கொடி (49). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

குழந்தை இல்லாததால், கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களாக கணவா் சிவக்குமாரை பிரிந்து தாயுடன் சின்னாளபட்டியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மகாலெட்சுமி தனது மற்றொரு மாற்றுத் திறனாளி மகளுடன் வெளியூா் சென்றிருந்துள்ளாா். வியாழக்கிழமை வெகுநேரமாகியும் பொற்கொடியின் வீடு திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினா் ஜன்னல் வழியே பாா்த்தபோது, பொற்கொடி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பொற்கொடியின் சடலத்தை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment