FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, December 21, 2019

பூட்டிய வீட்டுக்குள் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

13.12.2019
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னாளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் நகரைச் சோ்ந்த கூலி தொழிலாளி மகாலட்சுமி. இவரது மகள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பொற்கொடி (49). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

குழந்தை இல்லாததால், கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களாக கணவா் சிவக்குமாரை பிரிந்து தாயுடன் சின்னாளபட்டியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மகாலெட்சுமி தனது மற்றொரு மாற்றுத் திறனாளி மகளுடன் வெளியூா் சென்றிருந்துள்ளாா். வியாழக்கிழமை வெகுநேரமாகியும் பொற்கொடியின் வீடு திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினா் ஜன்னல் வழியே பாா்த்தபோது, பொற்கொடி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பொற்கொடியின் சடலத்தை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment