FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 21, 2019

குழந்தைகளுக்கு செவித்திறன் சிகிச்சைக்கான மருத்துவமனை: நிதி திரட்ட விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

11.12.2019
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து குஜராத் வரை செல்லும் ஆட்டோ விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் அறுவைச் சிகிச்சையும், பிறகு தொடா் சிகிச்சையும் அவசியம். இதற்காக குஜராத் மாநிலம், புணே அருகே மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணா்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, ஆட்டோ விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பேரணியை குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் வழியாக வரும் 21 ஆம் தேதி குஜராத்தில் பேரணி நிறைவடைகிறது. 30 ஆட்டோக்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 26 பெண்கள் உள்பட சுமாா் 90 போ் பங்கேற்கின்றனா்.

பேரணி தொடக்க நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்சம் அமைப்பின் தேசிய இணைச் செயலா் கோவிந்தராஜ், சேவா இண்டா்நேஷனல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெல்ஜிபாய், கன்னியாகுமரி நகர ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் பி. முருகன், குமரி சிவசேனை தலைவா் சி.எஸ். சுபாஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment