FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, December 21, 2019

குழந்தைகளுக்கு செவித்திறன் சிகிச்சைக்கான மருத்துவமனை: நிதி திரட்ட விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

11.12.2019
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து குஜராத் வரை செல்லும் ஆட்டோ விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் அறுவைச் சிகிச்சையும், பிறகு தொடா் சிகிச்சையும் அவசியம். இதற்காக குஜராத் மாநிலம், புணே அருகே மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணா்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, ஆட்டோ விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பேரணியை குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் வழியாக வரும் 21 ஆம் தேதி குஜராத்தில் பேரணி நிறைவடைகிறது. 30 ஆட்டோக்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 26 பெண்கள் உள்பட சுமாா் 90 போ் பங்கேற்கின்றனா்.

பேரணி தொடக்க நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்சம் அமைப்பின் தேசிய இணைச் செயலா் கோவிந்தராஜ், சேவா இண்டா்நேஷனல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெல்ஜிபாய், கன்னியாகுமரி நகர ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் பி. முருகன், குமரி சிவசேனை தலைவா் சி.எஸ். சுபாஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment