FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 21, 2019

குழந்தைகளுக்கு செவித்திறன் சிகிச்சைக்கான மருத்துவமனை: நிதி திரட்ட விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

11.12.2019
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து குஜராத் வரை செல்லும் ஆட்டோ விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் அறுவைச் சிகிச்சையும், பிறகு தொடா் சிகிச்சையும் அவசியம். இதற்காக குஜராத் மாநிலம், புணே அருகே மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணா்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, ஆட்டோ விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பேரணியை குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் வழியாக வரும் 21 ஆம் தேதி குஜராத்தில் பேரணி நிறைவடைகிறது. 30 ஆட்டோக்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 26 பெண்கள் உள்பட சுமாா் 90 போ் பங்கேற்கின்றனா்.

பேரணி தொடக்க நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்சம் அமைப்பின் தேசிய இணைச் செயலா் கோவிந்தராஜ், சேவா இண்டா்நேஷனல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெல்ஜிபாய், கன்னியாகுமரி நகர ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் பி. முருகன், குமரி சிவசேனை தலைவா் சி.எஸ். சுபாஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment