FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 21, 2019

வாய்பேச இயலாதவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் தான் செல்லும்

12.12.2019
மதுரை: 'கொலை வழக்கில் வாய்பேச இயலாதோர் சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தால்தான் செல்லும். போலீசில் அளிப்பது ஏற்புடையதல்ல. கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை கணேஷ் நகர் ஜெரின் (எ) திவான். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். அவரை 2014 ல் வலுக்கட்டாயமாக ஜெரின் அழைத்துச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு பலியானார். மேதா திவான் உட்பட சிலர் மீது கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மேதா திவானுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு:பெண்ணின் சகோதரர் வாய் பேச முடியாதவர்; செவித்திறன் குன்றியவர். அவரது சாட்சியத்தை சைகை மொழியில் வாய்பேச இயலாதோர் மற்றும் மற்றும் செவித்திறன் குன்றியோருக்கான புதுக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன்போலீசார்பதிவு செய்துள்ளனர். இது இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்புடையதல்ல.சாட்சிய சட்டப்படி வாய்பேச இயலாதோரின் சாட்சியத்தை எழுத்து அல்லது சைகை மொழியில் நீதிமன்றத்தில்தான் அவசியம் பதிவு செய்ய வேண்டும். போலீசார் தேர்வு செய்யும் இடத்தில் சாட்சியம் அளிக்க முடியாது என இந்நீதிமன்றம் கருதுகிறது.உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தவறிவிட்டனர். சாட்சிகளில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். சந்தேகத்திற்கு இடமின்றி மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. மனுதாரருக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment