FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 15, 2022

புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. போட்டி வேட்பாளராக களம் இறங்கிய வாய்பேச முடியாத பெண்


12.02.2022
புதுக்கோட்டை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.

புதுக்கோட்டை போஸ் நகர் 9-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சரிதா (வயது 36). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் அங்குள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணியன் குடும்பத்தினர் பாரம்பரியமாக தி.மு.க.வில் இருக்கிறார்கள். இதையடுத்து சரிதா கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால் இறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேட்பாளர் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை இழக்காத சரிதா சுயேட்சையாக 31-வது வார்டில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரிதாவின் கொழுந்தனார் மணி (கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது:-

எனது அண்ணி சரிதா திறமையானவர். மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் போய் நிற்பார். காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் சைகை மூலம் அவரிடம் பேச வேண்டியதில்லை. நமது வாய் அசைவினை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என் பதை தீர்க்கமாக உணர்ந்து கொள்வார்.

வாய்பேச முடியாத, காது கேட்காதவர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டு, நகரட்சியில் குரல் கொடுப்பார்கள் என சிலர் கேட்கிறார்கள். அதற்கும் அண்ணி (சரிதா) விடை கொடுத்துள்ளார்.

எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்சினைகளை, தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார். வாக்குறுதிகளுடன், இதனையும் துண்டு பிரசுரமாக அச்சிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கிறோம். அரசியல் கட்சிகள் பணத்தால் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். இந்த வார்டில் 80 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.

அண்ணன் மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணியை கரம் பிடித்ததால் இருவேறு சமூகத்திலும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். சரிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.


6 குறைகள் இருந்தால் சலுகை: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு


கோவை:பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், அரசு தேர்வுத்துறை பட்டியலிட்ட ஆறு விதமான குறைபாடுகளின் கீழ் வரும் பட்சத்தில், சலுகைகளை பெறுவதற்கான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம், தேர்வு எழுதுவதற்கு உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன்படி, சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், கைமுறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் குறைபாடு, ஆகிய குறைபாடுள்ளவர்களுக்கு, சலுகை வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய மாணவர்களின் அடையாள அட்டை நகல், மருத்துவ குழுவின் பரிந்துரைக்கடிதம் பிற விபரங்களை, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Friday, February 11, 2022

ரயில் மோதியதில் காதுகேளாத மாற்றுத்திறனாளி பலி

 



"போராடியும் திமுக-வில் வாய்ப்பு கிடைக்கல!" - சைகையால் வாக்கு சேகாிக்கும் காதுகேளாத மாற்றுத்திறனாளி தம்பதி


புதுக்கோட்டை மாவட்டம் 31-வது வார்டு போஸ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் தீவிர விசுவாசி. 45 வருடங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

இவரின் மகன் சுப்பிரமணியன், மருமகள் சரிதா ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட சரிதா விருப்பப்பட, அதற்காக திமுக கட்சித் தலைமையிடம் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், நேர்காணலில் மாற்றுத்திறனாளி என்பதைக் காரணம் காட்டி திமுகவினர் சரிதாவைப் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர், திமுக முக்கிய நிர்வாகிகளை கண்ணன் சந்தித்த போதும் சீட் இல்லை என்று மறுத்துவிட்டனர். இந்த நிலையில், தான் 31-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார் சரிதா. சுப்பிரமணியனும், சரிதாவும் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்கள். இரு சமூகத்தினரின் குடும்பத்தினர் புடைசூழ கணவனும், மனைவியும் மக்களிடம் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருவரும் வார்டு முழுவதும் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா - ஓர் பார்வை!

சுப்பிரமணியனின் சகோதரர் மணியிடம் பேசினோம்,

"அப்பா ரொம்ப வருஷமாவே திமுகவுல உறுப்பினரா இருக்காரு. தீவிர விசுவாசியும் கூட. எங்க அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள். நானும் ஒரு மாற்றுத்திறனாளி. குடும்பமே திமுக குடும்பம். அண்ணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணியை அண்ணன் சமூக தீர்த்திருத்த திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தான், இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் எங்க வார்டு பெண்கள் வார்டுங்கிறதால, அண்ணி போட்டியிட திமுகவில் வாய்ப்பு கேட்டிருந்தோம். ஆனால், போராடிப் பார்த்தும் கடைசி வரை வாய்ப்பு வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் என்று கூறி எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அரசாணையே இருக்கிறது. ஆனால், யாரும் அதை கடைபிடிக்க முயற்சி கூட செய்யலை. வேறு வழியில்லாமல் தற்போது சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறோம். வாய் பேச முடியாத காது கேட்காதவர் வெற்றி பெற்றால், மக்கள் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வார் என்று சிலர் கேட்கின்றனர். எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்னைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழி இருக்கிறது என்பதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

அண்ணன், அண்ணி என இரண்டு சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாங்க. வார்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக, 31வது வார்டில் வெற்றியை ஈட்டுவோம்" என்றார்.


Wednesday, February 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது தேர்வில் சலுகை

09.02.2022
சென்னை : பொது தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, உரிய காலத்தில் சமர்ப்பிக்க தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பொது தேர்வுகளை எழுதும், ஆறு வகை யான மாற்று திறனாளிகளுக்கு, குறைகளின்றி தேர்வு எழுதி மதிப்பெண் பெற, குறிப்பிட்ட சலுகைகள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பார்வை திறனற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா மற்றும் நரம்பியல் குறைபாடுள்ளோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும்.

இந்த சலுகை பெற விரும்புவோர் உரிய வழிமுறைப்படி, மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று, உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட அரசு தேர்வு இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Monday, February 7, 2022

Dailyhunt and RedFM collaborate to launch Vibe Check, a short-video news delivery program

07.02.2022
Caters to individuals with speech and hearing impairments (SHI); clocks 20 million views in just a week since its launch


Dailyhunt, India’s #1 local language content platform, has collaborated with RedFM, one of India’s largest radio networks, to launch ‘Vibe Check’. In a first-of-its-kind initiative, Vibe Check brings India’s best RJs from RedFM to the content repertoire of Dailyhunt to present news in a snackable short-video format. Inclusive Divyangjan Entrepreneur Association (IDEA)—an association that works on livelihood opportunities for differently abled individuals has joined this initiative as an inclusion partner to enable the delivery of content to those with speech and hearing disabilities.

Leveraging its rich tech stack to deliver highly personalised content across 15 Indian languages and several genres, Dailyhunt is the first Indian digital platform to have conceptualised delivering news in bite-sized video formats, hence effectively creating and communicating newsworthy content to the users of Bharat. Taking on an inclusive and humane approach towards content delivery, Dailyhunt brings on-board an interpreter from IDEA who would communicate the news content in Indian sign language, hence co-hosting the program with an anchor reading out the content. This new-age format is witnessing resounding success on the platform, having garnered a total of 20 million views in a span of just 7 days since its launch. Packaging news in this short-video format, Vibe Check aims at clearing the clutter that exists in the space of news content.

“We’ve witnessed the power of short-video in its ability to effectively communicate with users within a short span of time. Leveraging this popular format to enable the effective delivery of news, Dailyhunt is excited to be collaborating with RedFM to launch Vibe Check, as we aim at engaging and empowering our users with newsworthy content. As we take on an inclusive approach towards content delivery, we are also glad to have IDEA on board with us as we strive to create content that is more accessible, especially to those with speech and hearing impediments. With RedFM and IDEA, we are set to revolutionise the space of news content as we take on an effective and humane approach,” said Ravanan N, Executive Director, Eterno Infotech.

“We live in a world today that’s driven by technology. From healthcare to education, from entertainment to manufacturing, technology is everywhere. As digital technologies dramatically reshape industry after industry, Red FM yet again enters into one more such Digi-tech. Tech is the future of Content and Innovation. And to build our presence in the space, we are excited to announce our Strategic Alliance with a tech-based conglomerate, with multiple content platforms like Dailyhunt, One India and many other. This is what we call – Hyper digital meets Hyper local. It’s a first-of-its-kind collaboration, with the sole purpose of creating Innovative Content that leads to newer revenue opportunities. One of the flagship initiatives of this collaboration with Dailyhunt is –“Vibe Check”, a short format news bulletin for the speech & hearing impaired. We believe in working in an inclusive way and this is a great start to create content for specially abled people. Many more such market-firsts are soon to follow in the near future,” said Nisha Narayanan, COO & Director, RED FM

“Inclusive Divyangjan Entrepreneur Association – IDEA is committed to the mission of Making India as Inclusive Capital of the World. Dailyhunt launching this campaign is a milestone towards the Inclusive News and Information movement. IDEA is proud to be an Inclusion Partner with Dailyhunt in this mission to make inclusive media platform,” said Mallikarjuna Iytha, Founder and CEO, Inclusive Divyangjan Entrepreneur Association-IDEA


அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத குழந்தைகளை பேச வைக்கும் அதிநவீன சிகிச்சை

05.02.2022 திருச்சி:
பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளான்டேஷன் என்கிற நுண் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை இணை பேராசிரியர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காதுகேட்காத, வாய்பேச முடியாத 75 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் இதுவரை காக்ளியர் இன்பிளான்டேஷன் நுண் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கவும், பேசவும் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவாகும் இந்த நவீன சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் 75-வது குழந்தைக்கு பொருத்தப்பட்ட காக்ளியர் எந்திரம் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த எந்திரம் பொருத்திய பிறகு குழந்தைகளுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.



காதுகேளாத வாய் பேச இயலாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை


04.02.2022
ஆசை பட பாணியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த தம்பதி முகமது சலீம்- சோபியா. இவர்களுக்குப் பிறந்த மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் இருந்துள்ளார் . பல முயற்சிகள் செய்தும் இந்த குறையை குணப்படுத்த முடியவில்லை.

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மகனை பார்த்துக்கொண்டிருக்க மனது இல்லாததால் மகனை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் .

அதன்படி, முகமது சலீம் தனது மகனை பாலிதீன் கவரை எடுத்து, அதைத் தனது மகனின் முகத்தை முழுவதுமாக மூடி கட்டியிருக்கிறார். இதில் மூச்சுத்திணறி மகன் உயிரிழந்திருக்கிறார். அதன்பின்னர் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வாய் பேச முடியாத காது கேளாத எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது தங்கள் மகன் அப்படி இருப்பது அந்தப் பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோவில்பதாகை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.




Friday, February 4, 2022

மாற்றுத்திறனாளி ஜோடி பெற்றோர் எதிர்ப்பபை மீறி திருமணம்

04.02.2022
தாவணகரே--வாட்ஸ் ஆப் செயலி மூலம் வளர்த்த மாற்றுத்திறனாளி காதல் ஜோடி, நேற்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.தாவணகரேவின் ஹரப்பனஹள்ளி அருகே உள்ள கடபகரே கிராமத்தை சேர்ந்தவர் அக்சதா, 25 என்ற பெண். ஹாவேரியின் ராணிபென்னுாரு அருகே உள்ள வட்லகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு வால்மீகி, 25 என்ற ஆண். இருவரும் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். தாவணகரேயில் உள்ள மவுனேஸ்வரா காது கேளாதோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தனர். சஞ்சு பெங்களூரில் ஐ.டி.ஐ., படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின் இருவரும் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். நாளடைவில் இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் ஜாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும் காதலில் தீவிரமாக இருந்த இருவரும் நேற்று தாவணகரேயில் திருமணம் செய்து கொண்டனர். அக் ஷதா அண்ணன் போலீசில், தங்கை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த தம்பதி மனு அளித்துள்ளனர்.