FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 7, 2022

காதுகேளாத வாய் பேச இயலாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை


04.02.2022
ஆசை பட பாணியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த தம்பதி முகமது சலீம்- சோபியா. இவர்களுக்குப் பிறந்த மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் இருந்துள்ளார் . பல முயற்சிகள் செய்தும் இந்த குறையை குணப்படுத்த முடியவில்லை.

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மகனை பார்த்துக்கொண்டிருக்க மனது இல்லாததால் மகனை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் .

அதன்படி, முகமது சலீம் தனது மகனை பாலிதீன் கவரை எடுத்து, அதைத் தனது மகனின் முகத்தை முழுவதுமாக மூடி கட்டியிருக்கிறார். இதில் மூச்சுத்திணறி மகன் உயிரிழந்திருக்கிறார். அதன்பின்னர் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வாய் பேச முடியாத காது கேளாத எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது தங்கள் மகன் அப்படி இருப்பது அந்தப் பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோவில்பதாகை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.




No comments:

Post a Comment