FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, February 7, 2022

காதுகேளாத வாய் பேச இயலாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை


04.02.2022
ஆசை பட பாணியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த தம்பதி முகமது சலீம்- சோபியா. இவர்களுக்குப் பிறந்த மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் இருந்துள்ளார் . பல முயற்சிகள் செய்தும் இந்த குறையை குணப்படுத்த முடியவில்லை.

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மகனை பார்த்துக்கொண்டிருக்க மனது இல்லாததால் மகனை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் .

அதன்படி, முகமது சலீம் தனது மகனை பாலிதீன் கவரை எடுத்து, அதைத் தனது மகனின் முகத்தை முழுவதுமாக மூடி கட்டியிருக்கிறார். இதில் மூச்சுத்திணறி மகன் உயிரிழந்திருக்கிறார். அதன்பின்னர் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வாய் பேச முடியாத காது கேளாத எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது தங்கள் மகன் அப்படி இருப்பது அந்தப் பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோவில்பதாகை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.




No comments:

Post a Comment