FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 7, 2022

அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத குழந்தைகளை பேச வைக்கும் அதிநவீன சிகிச்சை

05.02.2022 திருச்சி:
பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளான்டேஷன் என்கிற நுண் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை இணை பேராசிரியர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காதுகேட்காத, வாய்பேச முடியாத 75 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் இதுவரை காக்ளியர் இன்பிளான்டேஷன் நுண் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கவும், பேசவும் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவாகும் இந்த நவீன சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் 75-வது குழந்தைக்கு பொருத்தப்பட்ட காக்ளியர் எந்திரம் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த எந்திரம் பொருத்திய பிறகு குழந்தைகளுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.



No comments:

Post a Comment