FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 7, 2022

அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத குழந்தைகளை பேச வைக்கும் அதிநவீன சிகிச்சை

05.02.2022 திருச்சி:
பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளான்டேஷன் என்கிற நுண் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை இணை பேராசிரியர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காதுகேட்காத, வாய்பேச முடியாத 75 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் இதுவரை காக்ளியர் இன்பிளான்டேஷன் நுண் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கவும், பேசவும் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவாகும் இந்த நவீன சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் 75-வது குழந்தைக்கு பொருத்தப்பட்ட காக்ளியர் எந்திரம் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த எந்திரம் பொருத்திய பிறகு குழந்தைகளுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.



No comments:

Post a Comment