FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 7, 2022

அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத குழந்தைகளை பேச வைக்கும் அதிநவீன சிகிச்சை

05.02.2022 திருச்சி:
பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளான்டேஷன் என்கிற நுண் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை இணை பேராசிரியர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காதுகேட்காத, வாய்பேச முடியாத 75 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் இதுவரை காக்ளியர் இன்பிளான்டேஷன் நுண் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கவும், பேசவும் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவாகும் இந்த நவீன சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் 75-வது குழந்தைக்கு பொருத்தப்பட்ட காக்ளியர் எந்திரம் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த எந்திரம் பொருத்திய பிறகு குழந்தைகளுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.



No comments:

Post a Comment