FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது தேர்வில் சலுகை

09.02.2022
சென்னை : பொது தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, உரிய காலத்தில் சமர்ப்பிக்க தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பொது தேர்வுகளை எழுதும், ஆறு வகை யான மாற்று திறனாளிகளுக்கு, குறைகளின்றி தேர்வு எழுதி மதிப்பெண் பெற, குறிப்பிட்ட சலுகைகள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பார்வை திறனற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா மற்றும் நரம்பியல் குறைபாடுள்ளோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும்.

இந்த சலுகை பெற விரும்புவோர் உரிய வழிமுறைப்படி, மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று, உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட அரசு தேர்வு இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment