FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, February 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது தேர்வில் சலுகை

09.02.2022
சென்னை : பொது தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, உரிய காலத்தில் சமர்ப்பிக்க தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பொது தேர்வுகளை எழுதும், ஆறு வகை யான மாற்று திறனாளிகளுக்கு, குறைகளின்றி தேர்வு எழுதி மதிப்பெண் பெற, குறிப்பிட்ட சலுகைகள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பார்வை திறனற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா மற்றும் நரம்பியல் குறைபாடுள்ளோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும்.

இந்த சலுகை பெற விரும்புவோர் உரிய வழிமுறைப்படி, மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று, உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட அரசு தேர்வு இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment