FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, February 4, 2022

மாற்றுத்திறனாளி ஜோடி பெற்றோர் எதிர்ப்பபை மீறி திருமணம்

04.02.2022
தாவணகரே--வாட்ஸ் ஆப் செயலி மூலம் வளர்த்த மாற்றுத்திறனாளி காதல் ஜோடி, நேற்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.தாவணகரேவின் ஹரப்பனஹள்ளி அருகே உள்ள கடபகரே கிராமத்தை சேர்ந்தவர் அக்சதா, 25 என்ற பெண். ஹாவேரியின் ராணிபென்னுாரு அருகே உள்ள வட்லகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு வால்மீகி, 25 என்ற ஆண். இருவரும் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். தாவணகரேயில் உள்ள மவுனேஸ்வரா காது கேளாதோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தனர். சஞ்சு பெங்களூரில் ஐ.டி.ஐ., படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின் இருவரும் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். நாளடைவில் இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் ஜாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும் காதலில் தீவிரமாக இருந்த இருவரும் நேற்று தாவணகரேயில் திருமணம் செய்து கொண்டனர். அக் ஷதா அண்ணன் போலீசில், தங்கை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த தம்பதி மனு அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment