FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, February 4, 2022

மாற்றுத்திறனாளி ஜோடி பெற்றோர் எதிர்ப்பபை மீறி திருமணம்

04.02.2022
தாவணகரே--வாட்ஸ் ஆப் செயலி மூலம் வளர்த்த மாற்றுத்திறனாளி காதல் ஜோடி, நேற்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.தாவணகரேவின் ஹரப்பனஹள்ளி அருகே உள்ள கடபகரே கிராமத்தை சேர்ந்தவர் அக்சதா, 25 என்ற பெண். ஹாவேரியின் ராணிபென்னுாரு அருகே உள்ள வட்லகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு வால்மீகி, 25 என்ற ஆண். இருவரும் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். தாவணகரேயில் உள்ள மவுனேஸ்வரா காது கேளாதோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தனர். சஞ்சு பெங்களூரில் ஐ.டி.ஐ., படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின் இருவரும் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். நாளடைவில் இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் ஜாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும் காதலில் தீவிரமாக இருந்த இருவரும் நேற்று தாவணகரேயில் திருமணம் செய்து கொண்டனர். அக் ஷதா அண்ணன் போலீசில், தங்கை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த தம்பதி மனு அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment