FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, February 4, 2022

மாற்றுத்திறனாளி ஜோடி பெற்றோர் எதிர்ப்பபை மீறி திருமணம்

04.02.2022
தாவணகரே--வாட்ஸ் ஆப் செயலி மூலம் வளர்த்த மாற்றுத்திறனாளி காதல் ஜோடி, நேற்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.தாவணகரேவின் ஹரப்பனஹள்ளி அருகே உள்ள கடபகரே கிராமத்தை சேர்ந்தவர் அக்சதா, 25 என்ற பெண். ஹாவேரியின் ராணிபென்னுாரு அருகே உள்ள வட்லகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு வால்மீகி, 25 என்ற ஆண். இருவரும் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். தாவணகரேயில் உள்ள மவுனேஸ்வரா காது கேளாதோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தனர். சஞ்சு பெங்களூரில் ஐ.டி.ஐ., படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின் இருவரும் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். நாளடைவில் இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் ஜாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும் காதலில் தீவிரமாக இருந்த இருவரும் நேற்று தாவணகரேயில் திருமணம் செய்து கொண்டனர். அக் ஷதா அண்ணன் போலீசில், தங்கை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த தம்பதி மனு அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment