FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, February 11, 2022

"போராடியும் திமுக-வில் வாய்ப்பு கிடைக்கல!" - சைகையால் வாக்கு சேகாிக்கும் காதுகேளாத மாற்றுத்திறனாளி தம்பதி


புதுக்கோட்டை மாவட்டம் 31-வது வார்டு போஸ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் தீவிர விசுவாசி. 45 வருடங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

இவரின் மகன் சுப்பிரமணியன், மருமகள் சரிதா ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட சரிதா விருப்பப்பட, அதற்காக திமுக கட்சித் தலைமையிடம் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், நேர்காணலில் மாற்றுத்திறனாளி என்பதைக் காரணம் காட்டி திமுகவினர் சரிதாவைப் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர், திமுக முக்கிய நிர்வாகிகளை கண்ணன் சந்தித்த போதும் சீட் இல்லை என்று மறுத்துவிட்டனர். இந்த நிலையில், தான் 31-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார் சரிதா. சுப்பிரமணியனும், சரிதாவும் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்கள். இரு சமூகத்தினரின் குடும்பத்தினர் புடைசூழ கணவனும், மனைவியும் மக்களிடம் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருவரும் வார்டு முழுவதும் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா - ஓர் பார்வை!

சுப்பிரமணியனின் சகோதரர் மணியிடம் பேசினோம்,

"அப்பா ரொம்ப வருஷமாவே திமுகவுல உறுப்பினரா இருக்காரு. தீவிர விசுவாசியும் கூட. எங்க அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள். நானும் ஒரு மாற்றுத்திறனாளி. குடும்பமே திமுக குடும்பம். அண்ணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணியை அண்ணன் சமூக தீர்த்திருத்த திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தான், இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் எங்க வார்டு பெண்கள் வார்டுங்கிறதால, அண்ணி போட்டியிட திமுகவில் வாய்ப்பு கேட்டிருந்தோம். ஆனால், போராடிப் பார்த்தும் கடைசி வரை வாய்ப்பு வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் என்று கூறி எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அரசாணையே இருக்கிறது. ஆனால், யாரும் அதை கடைபிடிக்க முயற்சி கூட செய்யலை. வேறு வழியில்லாமல் தற்போது சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறோம். வாய் பேச முடியாத காது கேட்காதவர் வெற்றி பெற்றால், மக்கள் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வார் என்று சிலர் கேட்கின்றனர். எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்னைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழி இருக்கிறது என்பதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

அண்ணன், அண்ணி என இரண்டு சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாங்க. வார்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக, 31வது வார்டில் வெற்றியை ஈட்டுவோம்" என்றார்.


No comments:

Post a Comment