FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, February 11, 2022

"போராடியும் திமுக-வில் வாய்ப்பு கிடைக்கல!" - சைகையால் வாக்கு சேகாிக்கும் காதுகேளாத மாற்றுத்திறனாளி தம்பதி


புதுக்கோட்டை மாவட்டம் 31-வது வார்டு போஸ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் தீவிர விசுவாசி. 45 வருடங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

இவரின் மகன் சுப்பிரமணியன், மருமகள் சரிதா ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட சரிதா விருப்பப்பட, அதற்காக திமுக கட்சித் தலைமையிடம் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், நேர்காணலில் மாற்றுத்திறனாளி என்பதைக் காரணம் காட்டி திமுகவினர் சரிதாவைப் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர், திமுக முக்கிய நிர்வாகிகளை கண்ணன் சந்தித்த போதும் சீட் இல்லை என்று மறுத்துவிட்டனர். இந்த நிலையில், தான் 31-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார் சரிதா. சுப்பிரமணியனும், சரிதாவும் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்கள். இரு சமூகத்தினரின் குடும்பத்தினர் புடைசூழ கணவனும், மனைவியும் மக்களிடம் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருவரும் வார்டு முழுவதும் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா - ஓர் பார்வை!

சுப்பிரமணியனின் சகோதரர் மணியிடம் பேசினோம்,

"அப்பா ரொம்ப வருஷமாவே திமுகவுல உறுப்பினரா இருக்காரு. தீவிர விசுவாசியும் கூட. எங்க அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள். நானும் ஒரு மாற்றுத்திறனாளி. குடும்பமே திமுக குடும்பம். அண்ணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணியை அண்ணன் சமூக தீர்த்திருத்த திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தான், இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் எங்க வார்டு பெண்கள் வார்டுங்கிறதால, அண்ணி போட்டியிட திமுகவில் வாய்ப்பு கேட்டிருந்தோம். ஆனால், போராடிப் பார்த்தும் கடைசி வரை வாய்ப்பு வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் என்று கூறி எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அரசாணையே இருக்கிறது. ஆனால், யாரும் அதை கடைபிடிக்க முயற்சி கூட செய்யலை. வேறு வழியில்லாமல் தற்போது சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறோம். வாய் பேச முடியாத காது கேட்காதவர் வெற்றி பெற்றால், மக்கள் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வார் என்று சிலர் கேட்கின்றனர். எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்னைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழி இருக்கிறது என்பதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

அண்ணன், அண்ணி என இரண்டு சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாங்க. வார்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக, 31வது வார்டில் வெற்றியை ஈட்டுவோம்" என்றார்.


No comments:

Post a Comment